பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 18, 2012

நேயர் விருப்பமென...

எதிர்பாரா வேளையொன்றில்
என் அனைத்து புலன்களும் சிதற
காற்றில் வருகிறது அப்பாடல்

முனுமுனுத்தபடி ரசிக்கிறேன்
இருவரும் கைகோர்த்து திரிகையில்
இப்பாடல் ஒலித்தது இருவருக்குள்ளும்

மிகவும் ரசித்த பாடல்களை
இன்று நான் தவிர்த்து விடுகிறேன்
அவை உன்னையும் நினைவு படுத்திவிடுவதால்

அப்படியிருந்தும் சில பண்பலைகள்
ஒலிபரப்பிக் கொண்டே தான் இருக்கிறது
நேயர் விருப்பமென,

மெல்லக் கசிகிறது அவ்வுயிரிசை
அருகில் சென்று ரசிக்கவும்
விலகிப் போகவும் மனமின்றி
இப்படியும் தவிக்க வேண்டித் தான் இருக்கிறது
சில நாட்களில்…

Jul 17, 2012

முகநூல் 17.07.12

ஒரு அழகான காதலைச்
சுமந்த பொழுதொன்றில்
எடையற்றவனானேன்...

நிலவு பூக்கும்
வனத்தில்
உதிர்ந்து தான் கிடக்கும்
நட்சத்திரங்கள்...

பல கவிதைகள்
உனக்காக எழுதப்படக் கூடும்
சில கவிதைகளோ காத்திருக்கிறது
உன்னால் மட்டுமே
எழுதப் பட வேண்டுமென...

கரடி பொம்மையென
காத்திருக்கிறது
என் காதல்
நீ கட்டிக் கொள்வாயென... 

உன் மீதான நேசத்தை
எத்தனையோ முறை எழுதியாயிற்று
ஒரு முறை கூட
சொன்னதில்லை...

Jul 16, 2012

முக நூல் 16.07.12

தற்போது தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் பாடி ஸ்பிரே விளம்பரங்களைப் பார்த்தால் எரிச்சல் வருகிறது... அதுவும் ஆண்கள் ஒரு அறையில் அரைகுறை ஆடையுடன் அதனை உபயோகிக்கும் போது எங்கிருந்தோ பெண்கள் எல்லோரும் அவனைத் தேடி வருவதாக வரும் விளம்பரம், பெண்களை மிக மோசமாக இழிவு படுத்துகிறது... எந்தப் பெண்ணும் இது குறித்து கவலைப் பட்டதாக தெரியவில்லை...

பெண்களை இது போன்று சித்தரிக்கும் காட்சிகளை எப்போது கண்டிக்கப் போகிறீர்கள் சகோதரிகளே...


முக நூல் 16.07.12



உன் நினைவோடு எதை எழுதினாலும் அழகாகி விடுகிறது... #கவிதை.

கோபத்தில் ஒளிந்திருக்கிறான் சாத்தான்
அவனை நானாக உருவாக்குவதில்லை
அவனை கொன்று விடவும் முடிவதில்லை...

கூர் தீட்டப் பட்ட கத்திகளே அதிகம்
தானாகவும் குத்தலாம்
மறைமுகமாக எறியவும் படலாம்
சாவைக் கண்டு பயந்தவனிடம் சொல்
ஒடிவிடக்கூடும்...

பல கவிதைகள்
உனக்காக எழுதப்படக் கூடும்
சில கவிதைகளோ காத்திருக்கிறது
உன்னால் மட்டுமே
எழுதப் பட வேண்டுமென...

எனக்குள் விழுந்த
ஒற்றைத் துளியாய் நீ
கடலும் வானும்
கலங்கிக் கிடக்கிறது... 

ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால் அதிலிருக்கும் சுவாரசியம் போய்விடுகிறது... :-(

விரல்களில் வண்ணத்துப் பூச்சி...

புகைப்படம்: கையிலிருக்கும் 
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை 
அசைக்கப் பார்க்கிறது 
நானோ அதை இரு விரல்களின் இடையில் 
இறுக்கிப் பிடித்திருக்கிறேன் 
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய் 
விட்டு விடுவேன் 
உன்னிடம் புன்னகை பிறக்கும் 
என் விரல்களில் படிந்திருக்கும் 
அதன் வர்ணங்கள் சொல்லும் 
நான் எவ்வளவு 
கொடூரமானவன் என்பதை...
கையிலிருக்கும்
வண்ணத்துப் பூச்சி தன் சிறகுகளை
அசைக்கப் பார்க்கிறது
நானோ அதை இரு விரல்களின் இடையில்
இறுக்கிப் பிடித்திருக்கிறேன்
நீ வந்ததும் விட்டு விடச் சொல்வாய்
விட்டு விடுவேன்
உன்னிடம் புன்னகை பிறக்கும்
என் விரல்களில் படிந்திருக்கும்
அதன் வர்ணங்கள் சொல்லும்
நான் எவ்வளவு
கொடூரமானவன் என்பதை...

அவள் பள்ளிக்கு செல்கிறாள்...

புகைப்படம்: பள்ளிக்குச் செல்ல தயாராகி இருந்தாள்
சீருடை அணிந்திருந்தாள் 
கழுத்தில் அடையாள அட்டை 
கால்களில் கருப்பு வண்ண காலனி 
தட்டில் சிறிது சோறுடன் 
அம்மா நின்றிருக்க 
அருகில் இருந்த மரத்தை ஓடித் தொடுகிறாள்  
அம்மாவிடம் ஓடிவருகிறாள் 
ஒரு வாய் உண்கிறாள் 
மீண்டும் ஓட்டம் 
மீண்டும் மரம் 
மீண்டும் அம்மா 
மீண்டும் ஒரு வாய் 
பள்ளிக்கான வண்டி வருகிறது 
ஓடிச் செல்கிறாள் 
புத்தகப் பையை சுமந்து வருகிறாள் அம்மா
அதை மூன்று மாடிகள் சுமந்து 
அவள் வகுப்பை அடைகிறாள் 
மாலையாகிறது 
அதே வண்டி 
திரும்பி வரும் போது 
அவள் களைத்திருக்கிறாள்
விளையாடும் எந்த நொடியிலும் 
களைப்படைவதில்லை
ஏனோ பள்ளி விட்டு வரும் போது மட்டும்...
பள்ளிக்குச் செல்ல தயாராகி இருந்தாள்
சீருடை அணிந்திருந்தாள்
கழுத்தில் அடையாள அட்டை
கால்களில் கருப்பு வண்ண காலனி
தட்டில் சிறிது சோறுடன்
அம்மா நின்றிருக்க
அருகில் இருந்த மரத்தை ஓடித் தொடுகிறாள்
அம்மாவிடம் ஓடிவருகிறாள்
ஒரு வாய் உண்கிறாள்
மீண்டும் ஓட்டம்
மீண்டும் மரம்
மீண்டும் அம்மா
மீண்டும் ஒரு வாய்
பள்ளிக்கான வண்டி வருகிறது
ஓடிச் செல்கிறாள்
புத்தகப் பையை சுமந்து வருகிறாள் அம்மா
அதை மூன்று மாடிகள் சுமந்து
அவள் வகுப்பை அடைகிறாள்
மாலையாகிறது
அதே வண்டி
திரும்பி வரும் போது
அவள் களைத்திருக்கிறாள்
விளையாடும் எந்த நொடியிலும்
களைப்படைவதில்லை
ஏனோ பள்ளி விட்டு வரும் போது மட்டும்...

அவள் வாசம்....

புகைப்படம்: அவள் நேற்றும் வந்தாள்
என்னிடம் கேட்பதற்கு 
அவள் கேட்கும் ஒன்றை 
அவள் வரமாக நினைக்கும் ஒன்றை 
வெகு சுலபமாகத் தந்து விட முடியும் 
தயங்கியபடியே நிற்கிறேன் 
அவளோ தினமும் வருகிறாள் 
பகலிலும் 
இரவிலும் 
மெல்ல மெல்ல அவளை விட்டு விலகுகிறேன் 
அவள் என்னை நெருங்குகிறாள் 
விலகுவதை நிறுத்தி விடுகிறேன் 
நெருங்குவதை நிறுத்துவதாக இல்லை அவள் 
கண்களை மூடி 
அவளிடம் நான் பயந்து விட்டதை 
அவளிடமிருந்து மறைக்கிறேன் 
அவளுக்கும் தெரியும் 
அவள் கேட்பதை 
நான் அவளுக்கு கொடுத்து விட்டேன் என்பது  
என்னிடம் கொடுப்பதற்கு 
எதுவும் இல்லை என்பதும் 
காற்று வீசுகிறது 
அவள் வாசம் வருகிறது 
இப்பொழுது அவள் வரக் கூடும்...
அவள் நேற்றும் வந்தாள்
என்னிடம் கேட்பதற்கு
அவள் கேட்கும் ஒன்றை
அவள் வரமாக நினைக்கும் ஒன்றை
வெகு சுலபமாகத் தந்து விட முடியும்
தயங்கியபடியே நிற்கிறேன்
அவளோ தினமும் வருகிறாள்
பகலிலும்
இரவிலும்
மெல்ல மெல்ல அவளை விட்டு விலகுகிறேன்
அவள் என்னை நெருங்குகிறாள்
விலகுவதை நிறுத்தி விடுகிறேன்
நெருங்குவதை நிறுத்துவதாக இல்லை அவள்
கண்களை மூடி
அவளிடம் நான் பயந்து விட்டதை
அவளிடமிருந்து மறைக்கிறேன்
அவளுக்கும் தெரியும்
அவள் கேட்பதை
நான் அவளுக்கு கொடுத்து விட்டேன் என்பது
என்னிடம் கொடுப்பதற்கு
எதுவும் இல்லை என்பதும்
காற்று வீசுகிறது
அவள் வாசம் வருகிறது
இப்பொழுது அவள் வரக் கூடும்...

Jul 15, 2012

முக நூல் 15.07.12

ஒரு கவிதையை அல்ல, ஒரு எழுத்தைக் கூட எழுதி விட இயலாது அவள் நினைவுகளின்றி....

நம் ரகசியங்களை சிலரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம், அவர்களை அதீதமாக நம்புகிறோம்... அவர்கள் நமக்கு தரும் துயங்களையும் தாங்கியபடி...
 
தேடல் தொலைவதும், தேடலில் தொலைவதும் அவரவர் விருப்பம்....

இருள் மரம் உதிர்த்த
மலர்களால் நிறைந்திருக்கிறது வானம்…

எடுத்து வந்த கவிதை...

யாருக்கும் கிடைக்காத
கவிதையொன்று எனக்கு கிடைத்தது
யாருமற்ற தெருவில்
ஒரு மழைக் கால இரவொன்றில்
பதினொன்று என்று குறியிடப்பட்ட
புளிய மரத்திற்கு அருகில் கிடந்தது
அக் கவிதை மழையில் நனைந்திருந்தது
குளிர் அதனை நடுக்கி இருக்கக் கூடும்
அதன் எழுத்துகள் கோணலாகி இருந்தது
அருகில் வரையப்பட்டிருந்த
ஒரு வண்ணத்துப் பூச்சி
தன் சிறகுகளின் வர்ணத்தை இழந்திருந்தது
என் அறைக்கு கொண்டு வந்தேன்
சுவரில் ஒட்டி வைத்தேன்
தினமும் இரவில் உயிர்பெற்று அலைகிறது
இன்னும் படித்து விடாத அக்கவிதை
ஒரு சில முற்றுப் புள்ளிகளையும்
ஆச்சர்யக் குறிகளையும்
இறுதியாய் ஒரு கேள்விக் குறியோடும்
இருக்கக் கூடும் அக்கவிதை
இனியும் என்னால் உறக்கத்தை
தொலைத்து விட முடியாதென்று
அதே புளிய மரத்தை நோக்கிச் சென்றேன்
இடம் இருந்தது
மரம் இல்லை
நான் எதை எடுத்து வந்திருக்கிறேன் என்பதை
இப்போது உணர்ந்து கொண்டேன்...

அவன் நினைவு...

ஒரு குடிசையின் ஓரத்தில்
அமர்ந்திருந்தேன்
சற்று நேரத்தில் யாரவது ஒருவன்
தேடியபடி வரலாம்
பேரம் படிந்தால் அவனுடன் இந்த இரவு
முடிந்ததும் இன்னொருவனுக்கான காத்திருப்பு
இங்கே எல்லோருக்கும் ஆசை தான்
இருக்கும் ஒன்றை விட
தன்னிடம் இல்லாத ஒன்றின் மீது
இதோ இப்போது வருபவனும்
அப்படித் தான் போல
நடு வயது
கலைந்த கேசம்
மெலிந்த உடல்
அவன் தன்னை சோதிக்க விரும்பி இருக்க வேண்டும்
நான் அவன் கரன்சிகளுக்கு
ஒரு முயலாகவோ எலியாகவோ
அருகில் வந்தான்
எந்த பேரமும் இல்லை
சரி என்றான்
எனக்கு புரிந்தது அவன் புதிதென்று
முடிந்த வரை கறக்கலாம் கரன்சிகளை
குடித்திருக்க வில்லை
புகை நாற்றம் இருந்தது
அவன் வீடாக இருக்க வேண்டும்
தனியன் போல
வீட்டுக்குள் நுழைந்ததும்
கட்டிலில் விழுந்தான்
சீக்கிரம் என்று தயாரானேன்
ஒரு நாள் என்றான்
தொகை சொன்னேன்
ம்ம்ம் என்றான்
சமையலறையைக் காட்டினான்
சமைக்கச் சொன்னான்
சாப்பிட்டோம்
தொலைக்காட்சியில் படம் பார்த்தான்
அருகில் அமரச் சொன்னான்
மடியில் படுத்திருந்தான்
மாலையில் தேநீர் கேட்டான்
பிறகு இரவு உணவு
படுக்கை அறைக்கு சென்றான்
மெல்ல தவழும் படியாய்
இசையை ஒலிக்க விட்டான்
இரவுடைக்கு மாறினான்
அருகில் வந்து உறங்கச் சொன்னான்
கட்டிக் கொண்டு உறங்கிப் போனான்
காலையில் கையில் பணம் திணித்து
பேருந்து நிறுத்தம் வரை வந்தான்
அதன் பின்
அவனை பார்க்கவே இல்லை
ஒரு நாள் யாரும் வராத இரவொன்றில்
அவன் நினைவு வந்தது
அவன் வந்தால் போதும் என்றிருந்தது...

அவனுக்கு வலிக்கட்டும்....

புகைப்படம்: நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...

.

@ மழைக் காதலன்
நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...

Jul 14, 2012

முக நூல் 14.07.12

இந்த இரவும் புதிதாய் எதுவும் தந்து விடப் போவதில்லை, உன் நினைவுகளுடன் விழித்திருத்தலைத் தவிர...

விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது இயல்பான நகைச்சுவை கூட கேலி செய்வதாகவே தோன்றுகிறது.... 

உன்னுடைய நேசத்தை ஒளித்து வை, இன்னொரு ஜென்மத்திற்கும் போதுமானதாகவே இருக்கும் உன் மீதான என் நேசம்...

மணலில் மட்டுமல்ல மனதிலும் பதிகிறது உன் கால் தடங்கள்... 








ஒளித்து வைத்த
குடுவைகளை எடுத்துத் தருகிறாள்
சனிக்கிழமை மதியப் பொழுதொன்றில்
எப்பொழுதும் போல்
அதில் பாதியே இருக்கிறது
மீதியை அடுத்த வாரத்திற்கென
மறைத்து வைத்திருக்கிறாள்
என்றே நம்புகிறேன்
நீங்களும் அவ்வாறே...


பேரிசை...

புகைப்படம்: ஒரு சாவு வீட்டில் ஒலிக்கும் 
தப்பை ஒலியை ரசிக்கிறேன் 
என் கால்கள் தானாகவே 
தாளமிடுகின்றது 
இடையிடையே விட்டு விட்டுக் கேட்கிறது 
வீட்டினுள் ஊதும் சங்கின் ஒலி
தன் மூச்சை நிறுத்திக் கொண்ட 
ஒருவருக்காக 
இன்னொருவர் மூச்சடைக்கி ஊதுகிறார் 
அதுவும் இனிமையாகவே ஒலிக்கிறது 
பனியில் குளிர் காற்றில் 
குளிர்ந்து லயம் மாறும் தப்பைகள் 
ஓலைகள் எரிக்கப்பட வெப்பம் ஏறுகிறது 
மீண்டும் தாளம் 
அதற்கேற்ற நடனம் 
அவர்கள் ரசிப்பதற்காக ஆடுவதில்லை 
எனினும் 
ரசிப்பவர்களே அதிகம் 
தப்பைகளுக்கு நெருப்பு போல் 
அவர்களுக்கும் இடையிடையே 
தேவைப் படுகிறது சுதியும் சுருதியும் 
மிஞ்சிப் போனால் 
இன்னும் ஒரு மணி நேரம் 
அதன் பிறகு அவர்களுக்காக 
தப்பைகளின் ஒலிக்காக
சங்கின் பேரிசைக்காக 
காத்திருக்கிறேன் 
வீதியில் அடுத்த பெருசு யார் என்று விசாரித்தபடி?
ஒரு சாவு வீட்டில் ஒலிக்கும்
தப்பை ஒலியை ரசிக்கிறேன்
என் கால்கள் தானாகவே
தாளமிடுகின்றது
இடையிடையே விட்டு விட்டுக் கேட்கிறது
வீட்டினுள் ஊதும் சங்கின் ஒலி
தன் மூச்சை நிறுத்திக் கொண்ட
ஒருவருக்காக
இன்னொருவர் மூச்சடைக்கி ஊதுகிறார்
அதுவும் இனிமையாகவே ஒலிக்கிறது
பனியில் குளிர் காற்றில்
குளிர்ந்து லயம் மாறும் தப்பைகள்
ஓலைகள் எரிக்கப்பட வெப்பம் ஏறுகிறது
மீண்டும் தாளம்
அதற்கேற்ற நடனம்
அவர்கள் ரசிப்பதற்காக ஆடுவதில்லை
எனினும்
ரசிப்பவர்களே அதிகம்
தப்பைகளுக்கு நெருப்பு போல்
அவர்களுக்கும் இடையிடையே
தேவைப் படுகிறது சுதியும் சுருதியும்
மிஞ்சிப் போனால்
இன்னும் ஒரு மணி நேரம்
அதன் பிறகு அவர்களுக்காக
தப்பைகளின் ஒலிக்காக
சங்கின் பேரிசைக்காக
காத்திருக்கிறேன்
வீதியில் அடுத்த பெருசு யார் என்று விசாரித்தபடி?

அவளாகிய அவன்...

புகைப்படம்: அவள் எங்கிருக்கிறாள் 
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை 
அவள் பற்றிய கவலையுமில்லை 
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை 
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும் 
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென 
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில் 
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை 
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு 
கைகளைத் தட்டியபடி 
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின் 
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும் 
ஐந்து நிமிட பேச்சுமே…
அவள் எங்கிருக்கிறாள்
அவள் எப்படி இருக்கிறாள்
யாருக்கும் தெரியவில்லை
அவள் பற்றிய கவலையுமில்லை
என்னுடன் தான் படித்தாள்
என்னுடன் தான் விளையாடினாள்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த நாள் வரை
நான் அவள் என சொல்லிய அவள்
அவனாக இருந்தாள்
அவன் என சொல்லுவது பிடிக்காமல்
அவள் என்றே சொல்ல சொன்னாள்
அவள் ஆண் உடைகளை வெறுத்து ஒதுக்கினாள்
தனிமையில் அக்காவின் தாவணி அணிந்தாள்
மை பூசிக் கொண்டாள்
நகப் பூச்சால் அலங்கரித்தாள்
நடு வகிடெடுத்து பூக்களைச் சூடினாள்
அவள் தான் அழகாக இருப்பதாக உணர்ந்தாள்
அவள் குரல் உடையவே இல்லை
தனித்து ஒதுங்கினாள்
ஆண்கள் வரிசையில் நிற்க தயங்கினாள்
கழிவறைகளில் துயரப் பட்டாள்
இன்னும் இன்னும்
நண்பர்கள் சிரித்தார்கள்
தோழிகள் வெறுத்தார்கள்
அவன் அவளாகியது குற்றமெனத் தூற்றினார்கள்
மனநிலை சரியில்லையென
கோவிலில் மந்திரித்தார்கள்
தனியறையில் பூட்டினார்கள்
ஒரு மழைநாள் இரவொன்றில்
அவளை காணவில்லை
ஊருக்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்
அவளின் அக்காவுக்கு திருமணம் நடந்தது
அதன் பிறகும் அவளை காணவில்லை
இன்றுவரை பார்க்கவுமில்லை
இப்பொழுதெல்லாம் கடைகளுக்கு
கைகளைத் தட்டியபடி
காசு கேட்டு வரும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் அவளைத் தேடுகிறேன்
என்னால் முடிந்ததென்னவோ
ஐந்து ரூபாய் நாணயமும்
ஐந்து நிமிட பேச்சுமே…

Jul 13, 2012

முக நூல் 13.07.12

கடலில் பொழிந்தால் என்ன
மழை என்றே சொல்
வேறு எப்படியும்
சொல்ல இயலாது...

என் கனவுக்குள் விரியும்
இரவென நீ
ஒற்றை தீபத்தை கைகளில்
ஏந்தியபடி
சுகந்தம் வீசும் அவ்விரவை
தொலைத்து விடவில்லை நான்
எனினும்
அது கனவாகவே இருப்பதன்
கொடுமையும் எனக்கே....
 
இன்னும் ஏதோ ஒரு
ஒளிந்திருக்கும் சொல்லோ
பிரியமோ தான்
என்னை எழுத வைக்கிறது...

என் செய்திப் பெட்டியிலிருக்கும்
உன் செய்தித் துண்டுகளை
அடிக்கடி பார்க்கிறேன்
உன் குரலும்
முகமும்
அதில் இருக்கிறது...
 
போடி என
பாதியில் விட்டுச்
செல்கையில்
நீ அழுதது
விளையாட்டில்லை...

விளையாடும்
எந்த விளையாட்டிலும்
இருவருமே
தோற்றதில்லை
அதற்காகத் தானே
விளையாடுகிறோம்...

நீயும் நானும் விளையாடும்
சதுரங்கத்தில்
உன் முதல் குறி
என் ராணி
ஏன் என எனக்கு தெரியும்...

மயிலிறகும்
கனக்கத் தான் செய்யும்
காதலின்
தனிமை பொழுதொன்றில்...

என்னதான்
போலியாக
நீ நடித்தாலும்
உன் முகம்
எனக்கு தெரியும் தான்...



பொருளின் எடையை மதிப்பிடலாம் மனதின் சுமையை...



கவிதைகளையும், அதன் கருத்துகளையும் மட்டுமே பெண்கள் ரசிக்கிறார்கள். இதை புரிந்து கொண்டவன் தன் உறக்கத்திலிருந்து எழக்கூடும்...

 

போதை - கவிதை

புகைப்படம்: போதையேற்றிக் கொள்ளத் தேடுகிறேன் 
கவிதை ஒன்றை !!!
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 
அது என்னை மயக்கத்தில் தள்ளும் 
மொழியினை குழறலாக்கும்
எதை சொல்கிறேன் 
சொல்ல நினைக்கிறேன் 
என்பதை அறிவிலிருந்து அகற்றும் 
வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள் 
ஒரு மேம்பட்ட கவிதை 
தன்னிடம் வீழ்த்தி 
தன்னுள் மூழ்கடித்து  
தன்னிலை மறக்கச் செய்வதைத் தவிர...
போதையேற்றிக் கொள்ளத் தேடுகிறேன்
கவிதை ஒன்றை !!!
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்
அது என்னை மயக்கத்தில் தள்ளும்
மொழியினை குழறலாக்கும்
எதை சொல்கிறேன்
சொல்ல நினைக்கிறேன்
என்பதை அறிவிலிருந்து அகற்றும்
வேறென்ன செய்ய வேண்டுமென்கிறீர்கள்
ஒரு மேம்பட்ட கவிதை
தன்னிடம் வீழ்த்தி
தன்னுள் மூழ்கடித்து
தன்னிலை மறக்கச் செய்வதைத் தவிர...

துரோகி...

என்னை துரோகி என்று சொல்
சந்தர்ப்பவாதி என்று முறையீடு
காமுகன் என்று பெயர் சூட்டு
நம்பிக்கை கொல்பவன் என செய்தி பரப்பு
ஆம் நான் அப்படியானவன் தான்
சிறிது நாட்களுக்கு முன்
நான் இப்படியானவன் என தெரிந்திருக்க
நியாயமில்லை தான்
ஏனெனில்
அப்பொழுது
என்னை நேசித்துக் கொண்டிருந்தாய்
நானோ எப்பொழுதும்
ஒரே மாதிரியாக இருக்கிறேன்
பாறைகள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை
மேகங்கள் உருமாறியபடியே...

நாத்திகன்...

பூக்கள் மலரும் போதும்
பறவைகள் சிறகு விரிக்கும் போதும்
பாம்பொன்று தன் சட்டை கழற்றுதல் போலும்
எந்த வித ஒலியுமின்றி
விரிகிறாய் எனக்குள் நீ...

வாழ்வெல்லாம் துடித்துச்
சாவதை விட
ஒற்றை நொடியில் இறந்து கிடக்கலாம்
சில மாதங்களாவது
நீ என்னை நேசிக்காமல் இருந்திருந்தால்...

கடவுளை தேடுபவன் ஒருவனை சந்திக்கிறேன்
வரும் வழியில் அவன் நாத்திகனாக இருந்தான்
ஒரு திறந்து கிடந்த சன்னலில்
உன் முகத்தை பார்த்திருக்க வேண்டும்
அவன் இனி கடவுளை பார்த்தென்ன...

ஒற்றைப் பனைமரக் கள்ளும் புளித்த மாவடுவுமாய்
அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு இதெல்லாம் புரியாது
அவனுக்குத் தேவையெல்லாம்
இன்னுமொரு பாட்டிலும்
தன்னிலை மறக்கும் போதையும்...

Jul 12, 2012

முக நூல் 12.07.12



பெயர்களும்
ஊரும்
மறந்து போகிறது
முகம் அப்படியே தான் மனதில்...

மௌனத்தின் பொருள்
பேச எதுவுமில்லை
என்பதாக இருப்பதில்லை...

இன்னமும் கூட
எல்லாக் கனவுகளையும்
புதைத்துத் தான் வைத்திருக்கிறேன்
மனதில்...

நான்
நீ
சேர்ந்தால்
நாம்
பிரிந்தால்
ஞாநி...


 

ஊர் கிணறு...



தினமும் மாலை நேரத்தில்
தோழிகளுடன்
கிணற்றடி வருகிறாய்
நீரிறைத்து
திரும்புகையில்
நிறைகிறது அக் கிணறு... 

உன் பிம்பம் பார்த்தே
தன் தாகம் தீர்த்தது
அக் கிணறு...
 

நீ தோழிகளோடு
பேசிச் சிரித்த கதைகளை
யாருமில்லா நேரத்தில்
எனக்குச் சொல்லிச் சிரிக்கிறது
ஊர் கிணறு...

தெருவின் மூலையில்
நீர்க் குழாய் வந்த பிறகு
உன்னைப் பார்க்காமல்
பாழடைந்து கிடக்கிறது
அதே கிணறு...  

உன் வீட்டிற்குள்
நீர் இணைப்பு வர
தேவைகளே இல்லாமல் போனது
தெருவின் நீர்க் குழாய்கள்... 



நீ திருமணமாகிப் போன
நாளிலிருந்து
பேச்சுத் துணைக்கு
இருப்பதென்னவோ
நீரிறைக்கும் ஊர் கிணறு தான்... 

யாருமே செல்வதில்லை
எனும் போதும்
அக் கிணறு
இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளையும்
நீரையும்
சுரந்த படி... 

இந்நாளிலும்
சில இரவுகளை
நான் கழிப்பதுண்டு
உனக்கும் எனக்குமான
காதலை
அக்கிணறிடம் சொல்லியபடி...

எல்லா கிணறுகளுக்கும்
தெரியும் தான்
நீரிறைத்த பெண்களின்
முகமும் மனதும்...  

Jul 10, 2012

முனுமுனுக்கும் பாடல்...

அவனுக்கான பாடலை
அவனே முனுமுனுக்கட்டும் விட்டு விடுங்கள்
அவனிடம் தாளங்களைப் பற்றியோ
சந்தங்களைப் பற்றியோ
யாரும் கேட்காதீர்கள்
அவனுக்கு அவையெல்லாம்
தெரிந்து விட நியாயமில்லை
பல்லவிகளும் சரணமும் அற்று
அவன் பாடல் ஒலிக்கும்
உங்களால் அவன் பாடலை
ரசிக்க முடியாமல் போகலாம்
அவனைக் குற்றம் சொல்லாதீர்கள்
அவனிடம் உங்களுக்கான
ஒரு ராகத்தை எதிர்பார்க்காதீர்கள்
அவன் தன் துயரத்தைப் பாடுகிறான்
அவன் தன் மகிழ்வைப் பாடுகிறான்
அவன் தன் இயல்பைப் பாடுகிறான்
அவன் பாடுவது பாடலே இல்லையெனும் போதும்
அவன் தன் வாழ்விற்காகவும் பாடக் கூடும்
இன்னுமொரு உயிரின் நினைவுக்காகவும்
பாடியபடியே இறந்து விடவும் கூடும்...

இருள் கவிதை....

புகைப்படம்: யதேச்சையாய் தொடும் பாவனையில்
உன் விரல்களை வருடுகிறேன் 
மெல்லப் பரவுகிறது 
என் உடலின் தகிப்பு உன்னுள் 
சற்றே நெருங்கி அமர்கிறேன் 
கண்களோடு கண்கள் கலந்து விடுவதைச்
சொல்லி விழிகளோடு பேசுகிறேன் 
கரங்களைக் கோர்த்துக் கொள்கிறேன் 
விடு படும் நிலையில் நீயுமில்லை 
விட்டு விடும் நிலையில் நானுமில்லை 
அங்கே துணிகள் சிதறிக் கிடந்தன 
முன் கதவு பூட்டப் பட்டிருந்தது 
வந்துவிடாத  நிலவை 
உன் கனவுக்குள் புகுத்துகிறேன் 
சன்னலின் திரைகள் அசைகின்றன 
காற்று தழுவ கூந்தல் சரிகிறது 
நெற்றி வகிட்டில் தொடங்கிய முத்தம் 
விடியும் போதும் முடியவே இல்லை
இடையிடையே கவிதைகளைச் சொல்கிறேன் 
சிரிக்கிறாய் என்னில் சாய்ந்தபடி 
அதன் பொருள் உணர முடியவில்லை 
இது எனக்கு சாதகமான பொழுது 
பயன் படுத்திக் கொள்ள யத்தனிக்கிறேன் 
கதவு தட்டப் படும் வரை 
இருவரையும் காப்பாற்றக் கூடும் 
சுற்றிலும் விரவிக் கிடக்கும் இருள்...
யதேச்சையாய் தொடும் பாவனையில்
உன் விரல்களை வருடுகிறேன்
மெல்லப் பரவுகிறது
என் உடலின் தகிப்பு உன்னுள்
சற்றே நெருங்கி அமர்கிறேன்
கண்களோடு கண்கள் கலந்து விடுவதைச்
சொல்லி விழிகளோடு பேசுகிறேன்
கரங்களைக் கோர்த்துக் கொள்கிறேன்
விடு படும் நிலையில் நீயுமில்லை
விட்டு விடும் நிலையில் நானுமில்லை
அங்கே துணிகள் சிதறிக் கிடந்தன
முன் கதவு பூட்டப் பட்டிருந்தது
வந்துவிடாத நிலவை
உன் கனவுக்குள் புகுத்துகிறேன்
சன்னலின் திரைகள் அசைகின்றன
காற்று தழுவ கூந்தல் சரிகிறது
நெற்றி வகிட்டில் தொடங்கிய முத்தம்
விடியும் போதும் முடியவே இல்லை
இடையிடையே கவிதைகளைச் சொல்கிறேன்
சிரிக்கிறாய் என்னில் சாய்ந்தபடி
அதன் பொருள் உணர முடியவில்லை
இது எனக்கு சாதகமான பொழுது
பயன் படுத்திக் கொள்ள யத்தனிக்கிறேன்
கதவு தட்டப் படும் வரை
இருவரையும் காப்பாற்றக் கூடும்
சுற்றிலும் விரவிக் கிடக்கும் இருள்...

Jul 5, 2012

மன்னிப்பும் தண்டனையும்...

மன்னிப்புகள் கிடைக்குமென்றே
குற்றங்கள் தொடங்குகின்றன
தண்டனைகளும் பெயரளவுக்கே
இன்றோ நீ பேச மறுத்து
விலகி போவதில் தெரிகிறது
என் குற்றங்கள்...

உன் பெரும் கருணையை
எதிர் பார்த்து நிற்கிறேன்
நொடிப் பொழுதில் கடந்து விடுகிறாய்
என்னையும்
என் நினைவுகளையும்
ஒரு புயலென...

என் வேடிக்கைகளும் பரிகாசங்களும்
உனக்கு புதிதல்ல
அது நமக்குள் இருக்க வேண்டும்
என்பதாக இருக்கிறது
உன் வேண்டுதல்
சில நேரங்களில் எனக்கான
லட்சுமணக் கோட்டை தாண்டி விடுகிறேன்...

நீயோ பிடிவாதக்காரியாய்
முகம் மறைத்து
குரல் மறைத்து
தனிமையில் விட்டுச் செல்கிறாய்
எப்பொழுதும் தவறுகளுக்கான தண்டனை
தனிமை படுத்துதல்
என்பதாகவே இருந்துவிடுகிறது...

:-(

Jul 4, 2012

தேவதையும் சாபமும்...

குருட்டுப் பிச்சைக்காரனின்
தட்டில் விழும் செல்லாக் காசென
அவனுக்கு அவன் தேவதை
சில வரங்களை தந்திருந்தாள்
அவளிருக்கும் வரை
அவ்வரங்கள் வாரங்களாக இருந்தது
பின்னர் அதுவே அவனுக்கு சாபங்களாக
அவன் தேவதையை
சபிக்கத் துவங்கினான்
இன்னொரு தேவதை வருகையில்
அவனுக்கு அப்பழைய தேவதையின்
நினைவு வருகிறது
அவளின் வரங்களை வேண்டாமெனச்
சொல்லி அவளுக்கு சாத்தானென
பெயரிடுகிறான்
அவனுக்கு நினைவிருக்கிறது
பழைய வரங்களும்
அதன் சுகங்களும்
ஆனாலும் அவன் இனியொரு
தேவதையை சபிக்க விரும்பவில்லை
அக் குருட்டுப் பிச்சைக் காரன்
தன்னிடம் உள்ள காசினை
நம்புகிறான்
அது அவனுக்கு அடுத்த வேளை
உணவளிக்கும் என்றும்...

Jul 3, 2012

எரிதல் என்பது...

புகைப்படம்: மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு 
பூத்திருக்கும் மலர்கள் 
மரங்களின் பறவைகள்  
நுண்ணுயிர்கள் 
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை 
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான் 
என் ஆசைகள் 
என் கனவுகள் 
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே... 
நாளை காட்டிலும் என்னிலும்  
சாம்பல் மிஞ்சியது என்பது 
வெறும் செய்தி மட்டுமே அல்ல...
மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு
பூத்திருக்கும் மலர்கள்
மரங்களின் பறவைகள்
நுண்ணுயிர்கள்
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான்
என் ஆசைகள்
என் கனவுகள்
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே...
நாளை காட்டிலும் என்னிலும்
சாம்பல் மிஞ்சியது என்பது
வெறும் செய்தி மட்டுமே அல்ல...

அதிர்ஷ்டமில்லாதவன்...

புகைப்படம்: அவன் தன்னை அதிர்ஷ்டமில்லாதவன் 
என்றே கூறிக் கொண்டான் 
அவனுக்கு கைகளில் எந்தக் குறையுமில்லை 
நன்றாக நடக்கவும் ஓடவும் முடியும் 
இலக்கியம் பற்றி சிறிது பேசவும் 
இசைகள் கேட்கவும் முடியும் தான் 
கல்வியும் இலவசமாகவே 
உடல் உழைப்பில்லாத வேலை 
கணினியும் இணையமும்  
அலுவலகத்தில் 
தேவைக்கேற்ற ஊதியம் 
உடைகள் 
காலணிகள் 
விலையுர்ந்த அலைபேசி 
மேலும் ஒரு இருசக்கர வாகனம் 
நல்ல நட்புகள் சுற்றிலும்  
எதையும் விட்டுத் தரும் 
தாயும் தந்தையும்  
அவன் தான் சொன்னான் 
அவன் அவளை நேசித்ததை 
தன்னுடன் அவள் இல்லாத வாழ்வில்
என்றுமே தான் ஒரு  
அதிர்ஷ்டமில்லாதவன் என்று... 
...
..
.
அவனுக்கு பதிலாக 
நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
அதையே தான் நானும் சொன்னேன்....
பளார்... 
கன்னம் சிவக்க...
அவன் தன்னை அதிர்ஷ்டமில்லாதவன்
என்றே கூறிக் கொண்டான்
அவனுக்கு கைகளில் எந்தக் குறையுமில்லை
நன்றாக நடக்கவும் ஓடவும் முடியும்
இலக்கியம் பற்றி சிறிது பேசவும்
இசைகள் கேட்கவும் முடியும் தான்
கல்வியும் இலவசமாகவே
உடல் உழைப்பில்லாத வேலை
கணினியும் இணையமும்
அலுவலகத்தில்
தேவைக்கேற்ற ஊதியம்
உடைகள்
காலணிகள்
விலையுர்ந்த அலைபேசி
மேலும் ஒரு இருசக்கர வாகனம்
நல்ல நட்புகள் சுற்றிலும்
எதையும் விட்டுத் தரும்
தாயும் தந்தையும்
அவன் தான் சொன்னான்
அவன் அவளை நேசித்ததை
தன்னுடன் அவள் இல்லாத வாழ்வில்
என்றுமே தான் ஒரு
அதிர்ஷ்டமில்லாதவன் என்று...
...
..
.
அவனுக்கு பதிலாக
நீங்கள் என்ன சொல்வீர்கள் ?
அதையே தான் நானும் சொன்னேன்....
பளார்...
கன்னம் சிவக்க...

மழைக் கதை...

 புகைப்படம்: எல்லோரும் மை நிரப்பும் 
எழுதுகோல்களில்
நான் மழை நிரப்புகிறேன்...

விட்டு விட்டு பொழிகிறது 
இப் பருவ மழை 
நினைவுகள் உறங்காதிருக்க...

கை கோர்த்து நனைந்த  
நாளொன்றின்  எச்சமாய் 
இன்றும் நான் மட்டும்... 

குளிராக இருக்கிறது 
இந்த இரவு 
உன் நினைவுகளின்றி...

சற்று நேரத்தில் விடிந்து விடும் 
சீக்கிரம் வா  
நம் மழைக் கதை பேசலாம்...
எல்லோரும் மை நிரப்பும்
எழுதுகோல்களில்
நான் மழை நிரப்புகிறேன்...

விட்டு விட்டு பொழிகிறது
இப் பருவ மழை
நினைவுகள் உறங்காதிருக்க...

கை கோர்த்து நனைந்த
நாளொன்றின் எச்சமாய்
இன்றும் நான் மட்டும்...

குளிராக இருக்கிறது
இந்த இரவு
உன் நினைவுகளின்றி...

சற்று நேரத்தில் விடிந்து விடும்
சீக்கிரம் வா
நம் மழைக் கதை பேசலாம்...

Jul 2, 2012

அலங்காரம்

 புகைப்படம்: நீ  தழுவியபடி 
இருக்கும் போதும் 
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில் 
சுகப் பட்டது நீயாக  இருக்கலாம் 
கூரிய  பற்களும் 
வளர்ந்த நகங்களுமாய் 
கீறல்கள் உடலெங்கும் 
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில் 
அலங்கரிக்கப் பட 
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை 
சட்டங்களிட்டு அலங்கரித்து 
வரவேற்பறையில் மாட்டி வை 
உன்னை ரசிகனென்று 
பாராட்டுவார்கள்....
நீ தழுவியபடி
இருக்கும் போதும்
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில்
சுகப் பட்டது நீயாக இருக்கலாம்
கூரிய பற்களும்
வளர்ந்த நகங்களுமாய்
கீறல்கள் உடலெங்கும்
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில்
அலங்கரிக்கப் பட
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை
சட்டங்களிட்டு அலங்கரித்து
வரவேற்பறையில் மாட்டி வை
உன்னை ரசிகனென்று
பாராட்டுவார்கள்....

புரிதல்கள் அர்த்தமற்றவை...

 புகைப்படம்: எல்லாப் பூக்களோடும் 
சண்டையிடும் 
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன் 
ஒளித்து வைத்துக் கொள் 
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து 
திரிகிறது 
பொய்களென மாறியபடி... 

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்  
சில நேரங்களில் நானாகவும் 
பல நேரங்களில் நீயாகவும்.... 

நீயாக இருப்பதன் கொடுமை 
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்... 

புரிதல்கள் அர்த்தமற்றவை 
அவை  வண்ணத்துப் பூச்சியினை  
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
எல்லாப் பூக்களோடும்
சண்டையிடும்
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன்
ஒளித்து வைத்துக் கொள்
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து
திரிகிறது
பொய்களென மாறியபடி...

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்
சில நேரங்களில் நானாகவும்
பல நேரங்களில் நீயாகவும்....

நீயாக இருப்பதன் கொடுமை
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்...

புரிதல்கள் அர்த்தமற்றவை
அவை வண்ணத்துப் பூச்சியினை
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
 

ஒத்திகை...

 புகைப்படம்: அவன் ஒரு தற்கொலைக்கு 
தயாராகி இருந்தான் 
இறந்து போய்விட 
அவன் ஒத்திகை பார்த்தான் 
மூச்சை நிறுத்தி 
ஒரு நிமிடம் தாக்குப் பிடித்தான்
பைத்தியகாரத் தனம் என்று  
சிரித்து ரசித்துக் கொண்டான்
தனக்குப் பிடித்தமான பாடல்  ஒன்றை 
பாடினான் 
விரல்களால் இசையமைத்தான் 
உறவுகளை நினைத்து 
கண்ணீர் கசிந்தான் 
பிறகு சொல்லிக் கொண்டான் 
நானே உலகம் 
நானே அதன் அரசன் 
கைகளைக் குவித்து 
கண்ணாடியை உடைத்து விட்டு 
காயத்துக்கு  மருந்திடத் தொடங்கினான்....
 
அவன் ஒரு தற்கொலைக்கு
தயாராகி இருந்தான்
இறந்து போய்விட
அவன் ஒத்திகை பார்த்தான்
மூச்சை நிறுத்தி
ஒரு நிமிடம் தாக்குப் பிடித்தான்
பைத்தியகாரத் தனம் என்று
சிரித்து ரசித்துக் கொண்டான்
தனக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை
பாடினான்
விரல்களால் இசையமைத்தான்
உறவுகளை நினைத்து
கண்ணீர் கசிந்தான்
பிறகு சொல்லிக் கொண்டான்
நானே உலகம்
நானே அதன் அரசன்
கைகளைக் குவித்து
கண்ணாடியை உடைத்து விட்டு
காயத்துக்கு மருந்திடத் தொடங்கினான்....
 

கசியும் துளி...

ஒரு நேசத்தையோ
ஒரு சோகத்தையோ
ஒரு ஆற்றாமையையோ
கொண்டிருக்கலாம்
யாருமற்ற தனிமையில்
கசியும் ஒரு கண்ணீர் துளி...
 

அவள்.... மழை!!!

 புகைப்படம்: உன்னில் மையம் கொண்டு 
என்னில் பொழிகிறது 
உனக்கான மழை...

அவள் மழை 
அவள் குளிர் 
அவளே கதகதப்பு...

ஒரு மழை 
ஒரு முத்தம் 
ஒரு நனைதல்....

நான் ஒரு மழைப் பறவை 
அருந்தும் துளிகளில் 
உன் நினைவு...

ஒவ்வொரு துளியும் 
ஒரு கடல் 
நீ சமுத்திரம்...

இன்னுமொரு மழை நாளில் 
அதே நீ 
அதே நான் 
கரையும் நினைவுகள்....
 
உன்னில் மையம் கொண்டு
என்னில் பொழிகிறது
உனக்கான மழை...

அவள் மழை
அவள் குளிர்
அவளே கதகதப்பு...

ஒரு மழை
ஒரு முத்தம்
ஒரு நனைதல்....

நான் ஒரு மழைப் பறவை
அருந்தும் துளிகளில்
உன் நினைவு...

ஒவ்வொரு துளியும்
ஒரு கடல்
நீ சமுத்திரம்...

இன்னுமொரு மழை நாளில்
அதே நீ
அதே நான்
கரையும் நினைவுகள்....

Jul 1, 2012

திரைச் சேலைகளுக்குப் பின்னால்....

அடுத்த தெருவில் தான் இருந்தாள்
ஒவ்வொரு முறை கடக்கும் போதும்
அனிச்சையாய் பார்ப்பது போல்
இருவரும் பார்த்துக் கொண்டனர்
அவள் வீட்டருகில் தான் இருந்தது
இஸ்திரி பெட்டி அண்ணனின் கடை
விடுமுறை நாளில் துணிகளை
அள்ளிச் செல்வான்
அவள் வாசல்படியில் அமர்ந்தபடி
ஏதேனும் படித்துக் கொண்டிருப்பாள்...

எப்படியும், என்றாவது
பேசுவான் என எதிர்பார்த்து
அவள் ஏமாந்திருந்தாள்
இவன் பேசவே இல்லை
ஒரு முறை நேர் எதிரே வருகையில்
மென்மையாக சிரித்துப் போனாள்
அதிகாலை இவன் கிளம்புகையில்
அவள் வீட்டில் விளக்கெரியும்
வாசல் தெளித்து கோலமும் இருக்கும்
சன்னலின் திரைகளுக்குப்
பின்னால் அவள் முகமும்
அவள் என்றுமே அவனுக்காக காத்திருந்தாள்
அவனும் தயங்கியபடியே
அவளால் வேறெப்படியும்
வெளிப்படுத்த முடியவில்லை நேசத்தை...

அவர்கள் முறைப்படி பூச்சூடுதலாம்
அவனுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை
உறவினர்கள் நிறைந்திருக்க
அவள் வீட்டை
வேடிக்கை பார்த்தபடி கடந்த போது
அலங்கரிக்கப்பட்ட அவள்
அவன் ஏனோ இயல்பில் இல்லை
வெகு நேரம் உறக்கமின்றி
மீண்டும் அதே தெருவில்
இம்முறை விளக்கின் வெளிச்சம் இல்லை
திரைச் சேலைகளுக்குப் பின்னால்
இருள் படிந்த முகம் மட்டும் இருந்தது
இன்னும் சில நாட்களுக்கு
அதிகாலை கோலமும் இருக்கலாம்....