பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 29, 2011

நினைவுத் தூறல்கள்: இப்பொழுதெல்லாம்என் கனவுகளில் தேவதைகளேவருவதில்லை...

நினைவுத் தூறல்கள்:
இப்பொழுதெல்லாம்
என் கனவுகளில் தேவதைகளே
வருவதில்லை...
: "இப்பொழுதெல்லாம் என் கனவுகளில் தேவதைகளே வருவதில்லை என்னை தனியே விட்டு செல்லும் பொழுது அவர்களையும் சேர்த்தே உன்னுடன் அழைத்து சென்றுவிட்டாய்....."

தொலைவில் நான்


இப்பொழுதெல்லாம்
என் கனவுகளில் தேவதைகளே
வருவதில்லை
என்னை தனியே விட்டு
செல்லும் பொழுது
அவர்களையும் சேர்த்தே
உன்னுடன்
அழைத்து சென்றுவிட்டாய்...

என்றைக்குமே இறந்துவிடாத
ஞாபகக் கிளிகள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொத்திச் சுவைக்கிறது
குருதி பெருகும்
நினைவுக் கனிகளை...

கால மாற்றங்கள்
இனி என்னில்
உணர்வதற்கு இல்லை
இறந்த காலத்தில
மட்டுமே நான் வாழ்வதால்...

இரவுகள் பகலாகும்
விழிகள் பெயரற்ற
ஒரு நதி மூலமாகும்
கால்கள் மட்டும்
தன்னிச்சையாய்
நீ சென்ற திசையில்...

உண்ணுவதாலும்
உறங்குவதாலும்
சுவாசிப்பதாலும் மட்டுமே
நான் இன்னும்
உயிருடன் இருப்பதாய்
நம்பிக்கை கொள்கிறேன்...

உன்னை தேடி நான்
புறப்படுகையில்
அருகில் தானிருந்தாய்
புள்ளியென மறையும்
தொலைவில் சென்று விடுகிறாய்
நான் நிற்கும்
அதே இடத்தில்
அதே கணத்தில்...