பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jun 11, 2011

முத்தங்கள்....


அதிகாலை வேளை
நெற்றியின் மீது
மென்மையாக இதழ் பதித்து
என்னை துயில் நீக்குவதில்
துவங்குகிறது
என் ஒவ்வொரு நாளும்....

வெட்கத்தோடு

நீ முத்தம் கேட்க
அன்றைய தினத்தின்
என் நாட் குறிப்பு
சிவந்து போய் கிடக்கிறது...

இரைக்கு காத்திருக்கும்

ஒரு புலியின் வேட்கையோடு
எப்பொழுதும் உன் உதடுகளில்
பதுங்கி இருக்கிறது
எனக்கான முத்தங்கள்....

எனக்கு தெரியாமல்

பின்னால் வந்து கட்டியணைத்து
கழுத்தில் புதைந்து
இதழ் பதிப்பாய்...
உலகின் போதை மாத்திரைகளுக்கு
மொத்தமாய் நீ விடும் சவால் அது...

மென்மையாய் தொடங்கி

வன்முறையில் குருதி
வழிய...
கைக் குட்டையில் இரு நாட்கள்
உதடு மறைத்த
ஒரு நினைவும் கூட...

ஒவ்வொரு முறை நீ

வெளி கிளம்புகையில்
என்னை அழைப்பாய்...
எனக்குத் தெரியும்
என் கன்னங்களில் ஈரத்தோடு
நான் திரும்புவேன் என்று...

ஏகாந்த இரவொன்றில்

கேட்டாய்...
கொடுத்த முத்தத்தில்
பிடித்த முத்தம் எதுவென?
இன்னும் கொடுக்காமல்
நீ மிச்சம் வைத்திருக்கும்
முத்தமென்றேன்....
தொடங்கி விட்டாய்
இதற்காகத் தானே காத்திருந்தாய்....