பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 6, 2007

ஊளையிட்ட தெரு நாய்




























வீதியெங்கும் சிதறிய குருதியில்


தெரிய வில்லை

நீ எந்த மதம் என்பது....


ஆனாலும் சாகும் வரை

உன்னிடம் கேட்க பட்டது

அது மட்டுமே......


கை விலங்குகள்

விலக்கப்பட்ட போதும்

இன்னும் கழற்ற படாமலேயே

இருக்கிறது தீண்டாமை......


இரட்டை குவளைகளை

இன்னமும் காண்கிறேன்

வழி நெடுக்கும்......


ஆங்கிலேய அறிவு

அப்படியே பிரித்து வைக்கிறது

அரசியல் புண்ணியத்தில்......


இன்னமும் சொல்லுகிறார்கள்

நீங்கள் இன்று வெட்டி கொண்டு

மாண்டத்துக்கு

அகால வேளையில்

ஊளையிட்ட தெரு நாய்

தான் காரணம் என்று.....

என் நினைவுகளிலிருந்து


என் நினைவுகளிலிருந்து

எழுந்து செல்லும் வண்ணத்து பூச்சி

செல்லும் முன் என் மீது

உன் நினைவுகளை வண்ணங்களாய்

வாரி இறைத்து செல்கிறது


வெள்ளி காசுகளை அருவியில்

கொட்டி விட்டு தேடி கொண்டிருக்கிறேன்

அக்கரையில் அமர்ந்து கேலி செய்கிறாய்

நான் தேடி கொண்டிருப்பது

காசுகளை அல்ல

நதியில் தெரியும் உன் பிம்பத்தை....


நான் ஓவியன் தான் மறுப்பதற்கில்லை

ஆனால் இருவரையும் சேர்த்து

வரைந்தே பழகி இருக்கிறேன்

உன்னை மட்டும் தனித்து வரைய சொல்கிறாய்

என் விரல்களை கேட்டிருக்கலாம்.....


உன் நினைவுகள்

துயரத்தையோ, மகிழ்ச்சியையோ

தந்து விடலாம்

சிறிது கால இடைவெளிக்கு பின்

இந்த துயரம் ஒரு பெரும் துயரத்தையோ

இந்த மகிழ்ச்சி ஒரு பெரும் மகிழ்ச்சியையோ

நினைவுகள் கடை விரிக்கலாம்

இவற்றை தாங்காத வண்ணம்

என் இதயம் பலவீனமாய் இருப்பது

உனக்கு தெரியாமல் போயிருக்காது.....


இப்பொழுதெல்லாம்

இருண்ட அறைகளுக்குள்

கண் விழித்து உன் நினைவகளோடு

கரைகிறேன் நான்

தனிமையின் கொடுமையில்.....

இனி எலாம் நலமே....






இப்பொழுதெல்லாம்


எதுவும் புரிவதில்லை


புரிந்து கொள்ள விழைவதுமில்லை


கற்பனை சாயம் ஏற்றி


புதுப்பிக்க தேவை இல்லை


இயல்பாக இருக்கட்டும்


தேவை அற்ற புரிதல்களை விட


நம்பிக்கைகளே


அமைதியாய் மனதிற்கு...




ஒரு நதியை நதி எனவும்


ஒரு கடலை கடல் எனவும்


ஒரு மலையினை மலை எனவுமே


அறிந்து கொள்ளப்பட்டுருக்கிறேன்


இனி புதிதாய் சேர்க்க


எதுவும் இல்லை....




பழங்கதையோ


புராணமோ


அறிவியல் கட்டுரையோ


வாசிக்க மட்டுமே


குளிரோ வெப்பமோ


இனி உணர மட்டுமே


தேவை அற்ற குழப்பம் இல்லை....




கவிதையும் ஓவியமும்


புரிதல்களை தாண்டி


செல்ல முற்படுகையில்


தளைகள் இடுவேன்


வேறு பரிமாணத்திற்க்கு


என்னை அழைக்கும்


உடன் பாடில்லை மனதில்.....




குழந்தையின் புன்னகை


தென்றலின் குளுமை


மழை துளிகளின் மென்மை


பாலை வெப்பத்தின் வீச்சு


இவை வாக்கியங்களில்


அடங்கும் எனில்


புரிந்து கொள்கிறேன்


அக் கணத்தில்....


அது வரை


இனி எலாம் நலமே....

என்னவள் காதலில் ஒரு நாள்


நேரமாகி கொண்டு இருக்கிறது

இன்னும் இரண்டு நிமிடங்களே மீதம்,

நட்பு வீடு என்று பெயரிட்டு

அழைக்கிறேன் துணைக்கு தம்பியை


அவசரமாய் காலணி பூட்டி

வேகமாய் தெருவிறங்கி நடக்கும் போது

அக்கம் பக்கம் சூழலும் பார்வை

யாரும் பார்க்காமல் இருக்க வேண்டுமென


கோபம் வருகிறது

மெதுவாக போகலாம் என்று

அவன் சொல்கையில்

இருந்தும் கால்கள் விரைவாய்


மஞ்சள் பெட்டி

மங்கலாய் வெளிச்சம்

தொலைவாகி கொண்டே இருக்கிறது

மன வேகத்தின் முன்னால்


அப்பாடா!

பெரு மூச்சு ஒன்று அறியாமலேயே..

கண்ணாடி கூண்டுக்குள் நுழைந்து

எண்கள் தொட்டு விரல் எடுக்கையில்

தம்பி கவனிப்பான் என


வேண்டுமென்றே வெறுப்பூட்டும்

பெண் குரல்

" சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்"

பட்டென வைத்து

மீண்டும் தொடர்புக்கையில்

அதே குரல் அதே லயம்


இரண்டு நாட்கள் அடைப்பட்டது போல்

வியர்வை வெளிக் கொட்ட

இரு நிமிட தவிப்பு நரகமாய்

இதோஒலிக்கும் மறுமுனை

இசையென இதயத்தில்


அரத பழையாதாய்

அதே "ஹலோ"

மூலையில் பரவி

குரல் பதிந்து

நீ தான் என தெரிந்து

மென்மையாய் சொன்னேன்

அதே "ஹலோ"


அரசியல்

சினிமா

விளையாட்டு

படிப்பு

சீரியல்

என முடிக்க முடியாமல்

திண்டாடும் பொழுது

கண்கள் மேல் நோக்கி

கட்டணம் பார்த்து பதறும்


வைக்கட்டுமா?

என மூன்று முறை கேட்ட பின்

பேசிய வார்த்தைகள்

மூன்று நூறுக்கும் அதிகமாய்

கையோடு

இதயத்தையும் சேர்த்து இறக்கி

வைத்து விட்டு

கதவு திறக்கையில்

முகம் வருடும் மென் காற்று

மூச்சின் வெப்பத்தையும்

நனைந்த ஆடைகளையும்

உணர்த்தும்


அலட்சியமாய்

சில்லறைகளோடு

சில நோட்டு களையும்

தந்து விட்டு பார்க்கையில்

தெருவில் போகும் பேருந்தை

வேடிக்கை பார்ப்பவனை கண்டு

நிம்மதியாய் முறுவல்

உதடுகளில்


திரும்புகையில்

வேகமாய் போகிறான் அவன்

தலை குனிந்தவாறே

பின் செல்கிறேன்

"அம்மா விடம் சொல்லி விட கூடாது"

என்ற பெரிய வேண்டுதலில்.....


காதல் வாழ்க்கை -1


"திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்க படுகின்றன"

அவ்வளவு உயரத்தில்

ஒரு அசம்பாவிதம்

நடந்தால்

எப்படி தடுக்க?


காதலில் நீ எப்போதுமே

அமைதி தான்!

நான் பேசுவதை கவனமாய் கேட்பாய்

உன் சிறு சிறு அசைவுகளை

ரசித்து கொண்டே

நானும் தொடருவேன்!!!


இன்று நான் பேசுவது

அலுவலகத்தில் மட்டுமே

மீறி பேசினால்

பதிலுக்கு பூரி கட்டைகளும்

பறக்கும் தட்டுகளுமே பேசுகிறது

என்ன செய்ய?


என் மனைவிக்கு

அன்பு அதிகம் என் மீது

நான் அடி பட்டாலும்,

வலிக்கிறதா என்று

கேட்கும் போது மட்டும்......


அலுவலகம் விட்டு வந்ததும்

காபி கொடுப்பாய்

அப்பொழுதே தெரிந்து விடும்

நான் மார்க்கெட்

செல்லவேண்டும் என்பது....


இரவு 11 மணிக்கு

தோள் சாய்கையில்

கேட்பாய்

அலாரம் வச்சீங்களா?

தேவை இன்றி

நினைவில் வரும்

அதிகாலை பால் பூத்....


பொண்ணு படிக்கவே

இல்லை பா...

எனக்கு புரியும்

"கொஞ்சம் சொல்லி கொடு"

என்கிறாய்.


பேப்பர் பையனுக்கு

என்ன சொல்ல?

இன்னிக்கு ரசம் தான்...

கப் ல தயிர் இருக்கு...

பக்கத்து வீட்டில

கார் வாங்கி இருக்காங்க....


இப்படி எத்தனையோ

இருந்தாலும்

பிடிக்கிறது அவள் வைக்கும்

வத்த குழம்பு...


இப்பொழுதெல்லாம்

மாலை வந்தாலே

நீ சொல்லும் அனைத்தும்...?

சரியாகிவிடுகிறது...

இரவு பட்டினி கிடக்க

என்னால் முடியாது

( சோறு இல்லாம பா)


விடுமுறை வந்தால்

கொண்டாட்டம் தான் உனக்கு

வித விதமாய் சமைத்து

கொடுக்க சொல்லுவாய்

வாசிங்மிசின், கிரைன்டர்

என எதுவும் கேட்டதில்லை நீ

பிறகு நான் எதற்கு....


சேலைகள் ,சுடிதார்கள்

மடிப்பு கலையாமல்

இருக்க வேண்டும் உனக்கு

இஸ்திரி பெட்டி

சூடு பட்டு

கை உதறும் போதும்...


இருந்தாலும் விடுமுறை வேண்டும்

எனக்கு.....

எனக்காக அனைத்தையும்

விட்டு வந்தவளை

நெஞ்சுக்குள் தூங்க வைக்கும்

மதிய வேளை

ஒன்று கிடைக்க.....


நீ ஊருக்கு போன

ஒரு நாளில் தொலை பேசியே

துணை நமக்கு

சீண்டல்கள்

சிரிப்புகள்

அழுகை

கோபம்

பிடிவாதம்

என அனைத்துமாய் கலந்து

கடைசியில் சொல்லுவாய்

"உன்ன பாக்காம இருக்க முடியல" டா

அது போதும் எனக்கு....


ஒரு நாள் மாலை

உன் கல்லூரி தோழி வந்திருந்தாள்

இருவரும் அமர்ந்துபேசி

கொண்டு இருந்தீர்கள்

நெடு நேரம்....

சிறிது நேரம் கழித்து

தேநீர் கோப்பைகளுடன்

வந்தேன்ஆச்சரியமாய் உன் தோழி !!

அவள் கண்களில் தெரிந்தது

பொறாமை மட்டுமே

அவள் போனதும்

என்னிடம் "ஏண்டா என் மானத்தை வாங்கர"

என்றாய்

ஆனாலும் உன் கண்களில்

நன்றி தெரிந்தது..

எத்தனை முறை

நீ கொண்டு வந்திருப்பாய்

எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடு...