பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 22, 2011

நினைவுகளின் மிச்சத்தில்


ஒவ்வொரு நாளின்
முன்னிரவுப் பொழுதுகளில்
நான் விழித்திருக்கக் காரணம்
நீயாகவும் இருக்கலாம்....
இதுவும் கடந்து போகும்
நிலையில் இல்லை நான்
எதையும் இழக்கா
நினைவுகளின் மிச்சத்தில் ...
இதே தெருவில் ஆயிரம் முறை
நடந்தவன் தான்
நீ இல்லாத இந்த நாட்களில்
கொதித்துக் கிடக்கிறது
தெருவும் நீ நடந்த இதயமும் ...
உறக்கம் தொலைக்கும் இரவுகளில்
நிலவை ரசிக்கும் மழலையாய்
உன் நினைவுகளை
ரசிக்க பழகி விட்டேன்
ஒரு வேளை நீயும்
வாழ்வின் விதிகளால் கட்டுண்டு
அதே தெருவில் விட்டு
வந்திருக்கலாம் எனக்கான உன்னை..