பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒரு நாளின் பின்பகல்


செல்லரித்துப் போன
காகிதமென
கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகுமோ
உன்னில் என் நினைவுகள்...

தேவைப்படும் என
தேக்கி வைக்காதே
இயல்பான ஒரு நதியின்
நீரோட்டத்தைப் போல
இயல்பாய் இருக்கட்டும்...

புகைப் பட காட்சிகளென
நிறைத்து
யாதேனும் ஒரு மழைநாளிரவில்
யதேட்சையாய்க் கையிலெடுத்து
கோடை வரை ரசித்திருப்பேன்
நம் நினைவுகளை....

உயிர் பிரிந்து வெளியேறும்
தருணத்தில் புலப்படாத
மெல்லிய ஓசைகளை மீறி
ஒலிக்கும் என் கவிதைகளை
நீ
வாசிக்கும் உதடசைவுகள்...

உண்ணவும்
உறங்கவும் மறக்கலாம்
அடிக்கடி மறக்க
நினைக்கும்
நம் நாட்களைத் தவிர
எல்லாவற்றையும்...

நீ வீட்டுப் போன
எழுத்துக்களில் நான் கவிதை
மொழிகளில் நான் இசை
வர்ணங்களில் நான் ஓவியம்
சுவாசத்தில் நான் தென்றல்
அன்பில் நான் மனிதனாய்...

மொத்தமாய்
ஒரு நாளின் பின் பகல் பொழுதுகளில்
சிரித்துக் கொண்டே பேசி
உன்னிடமிருந்து
பிரித்து வைத்தாய்
கண்களில் நீர் மறைத்து
மனதில் வலி மறைத்து
உன் வரவிற்காய் காத்துக் கிடந்த
காலங்கள் மறைத்து
உன்னோடு வாழ்ந்த
கனவுகளை மறைத்து
.......
....
...

இப்படி
எதுவுமே தேவை இருந்திருக்காது
என் காதலை
உன்னிடம்
மறைத்திருந்தால்....

உதட்டுக்கு வராத முத்தம்...

தோழா...
எப்படி
உன்னால்
சொல்ல முடிந்தது
என்னிடம்?

கல்லூரிப் பாடத்திலிருந்து
காண்டம் ஜோக்
வரையிலும்
பகிர்ந்து கொண்டவன் நீ!

நம் பரஸ்பர
ரசனைகள் பற்றி
பட்டியலிட
பக்கங்கள் போதாது....

கல்லூரி வாரவதியில்
கால நேரமற்று
பேசிக் கொண்டிருந்து
பதறிப் பிரிந்த போதும்...

கடற்கரையில்
விரல் கோர்த்து
அலையில்
நனைந்த போதும்...

வேடிக்கையாய்
என் கன்னத்தில்
வேகமர்றுத்
தட்டிய போதும்...

புறங்கையில்
பூப் போல
நீ இட்ட முத்தத்தின்
போதும் கூட
நான் நினைத்த தில்லை
இப்படி
சொல்லப் போகிறாய்
என்று?

நிறைய
தோழிகளின் காதலுக்கு
பாலமாய் இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான்...

ஆனாலும்
நீயும் கூட
உன் காதலை சுமந்து சென்று
மற்றவரிடம் சேர்க்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது
என்னிடம்?

எப்போதும்
தூது பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை
காதல்....

- உமா சம்பத்

குழந்தைச் சித்திரம்...

மேஜை மீதிருந்த
உங்கள் தூரிகையை
லாவகமாய்ப் பற்றி
புதிய வானத்தின் புதிய வண்ணங்களை
தீட்டுவதற்கு முற்படுகிறதொரு
குழந்தை

அதன் தூரிகை மொழியில்
முன்னேற்பாடற்ற புதிய வானம்
துலக்கம் பெரும் வேளை
பழைய வானத்தின் சாயல் ஒன்றின்
சிறு பிசிறைக் கூட
அது இச் சித்திரத்துள்ளாக
எடுத்து வரவில்லை

முற்றிலும் அது
புதிய நிறங்கள்
புதிய கோடுகள்
புதிய விஷயங்களால்
நிரம்பி வழிகிறது
உச்சரிப்பின் வார்த்தைகளற்ற
சித்திரத்தின் வான் கோப்பை

யாரும் வர வேண்டாம்
உங்கள் புலன்கள்
பிரவேசிக்க வேண்டாம்
குழந்தை ஓவியம் பார்க்க

ஒரு வேளை
நீங்கள் அதை
வானமேயில்லைஎன்று சொல்லி
அக் குழந்தையை
பயமுறுத்தி விடக் கூடும்...

-கடற்கரய்...
ஒ, கடவுளே
முயலை எனது
இரையாக்கும் முன்னர்
என்னைச்
சிங்கத்தின்
இரையாக்கி விடு....

இரவின் பாதையைப்
பாதுகாத்து வைத்து,
ஒருவன்
விடியலை
அடைந்து விட முடியாது...

எனது துன்பத்தின்
ஒரு பகுதியே
சில இன்பங்களின்
மீதான ஆசை
என்பது தான் விசித்திரம்....

உண்மை என்பது
எப்பொழுதும்
அறியப் பட வேண்டியது
சில போது
வாய் விட்டு உரக்க
சொல்லப் பட வேண்டியது...

நம்மிடம் இருக்கும்
உண்மையான இயல்பு
அமைதியாய் இருக்கும்
நம்மால் முயன்று
அடையப்பட்ட ஒன்று
ஓயாமல்
பேசிக் கொண்டிருக்கும்...
கணக்கற்ற சூரியன்களின்
இயக்கத்தை வைத்தே
காலத்தைக் கணக்கிடுகிறோம் நாம்
அவர்கள் தம்
சிறு பைகளில் உள்ள
சிறு இயந்திரங்களைக் கொண்டு
காலத்தை அளவிடுகின்றனர்
இப்பொழுது
எனக்கு கூறுங்கள்
ஒரே இடத்தில்
ஒரே நேரத்தில்
நாம் என்றேனும்
சந்திக்க
எவ்வாறு இயலும்?
இந்த
அதிசய ஏரியில்
கூழாங் கல்லான என்னைக்
கடவுள் எறிந்த போது
கணக்கற்ற வட்டங்களால்
ஏரிப் பரப்பின் மீது
சலனப் படுத்தினேன்
ஆனால்
ஏரியின் அடி ஆழத்தை
நான் அடைந்த போது
சலனமற்றவனாகிப் போனேன்...
ஒரு முத்து
மணல் துகளின் மேல்
உழைப்பின் வலியினால்
கட்டப் பெற்ற
ஒரு கோயில்...
எந்தத் துகளின் மீது
எந்த ஏக்கங்கள்
எமது உயிர் உடல்களைக்
கட்டினவோ?
ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தவுடன்
இதுவரை
அவளுக்குப் பிறக்காத
எல்லாக் குழந்தைகளையும் பார்த்தேன்
என்னருகில்....
ஒரு பெண் என் முகத்தைப்
உற்று நோக்கியவுடன்
அவள் பிறக்கும் முன்
இறந்து போன
எனது எல்லா முந்தயரையும்
அறிந்து கொண்டாள்....
ஒரே ஒரு முறை தான்
பேச்சற்றுப் போனேன்
நான்
அது
நீ யார்? என ஒரு மனிதன்
கேட்ட போது?
விழித்த போழ்து அவர்கள்
என்னிடம் சொல்கிறார்கள்
நீயும் நீ வாழும் உலகமும்
ஓர் எல்லையற்ற கடலின்
எல்லையற்ற கடற்கரை மணலின்
ஒரு துகளே ஆகும்
என் கனவில்
அவர்களுக்குச் சொல்கிறேன்
'"நானே எல்லையற்ற கடல்
எல்லா உலகங்களும்
எனது கரையின் மணற் துகள்களே !
எப்பொழுதும் இந்தக் கரைகளின் மீது
மணலுக்கும் நுரைக்கும் நடுவே
நடந்து கொண்டிருக்கிறேன்
ஓங்கி வரும் அலை
என் காலடித் தடங்களை அழிக்கும்
காற்று
என் மேல் நுரையினை தெளிக்கும்
ஆனால்
கடலும் கடற்கரையும்
காலம் காலமாய் இருக்கும்...