பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 15, 2012

அவனுக்கு வலிக்கட்டும்....

புகைப்படம்: நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...

.

@ மழைக் காதலன்
நீ தனியாகவும் இருக்கலாம்
சில அடிபொடிகளோடு சேர்ந்தும் கூட

முக்கியமானது
அவன் தனியாக இருக்க வேண்டும்
தனித்திருப்பவனை அடிப்பது சுலபம்

முதலில் எதிர்ப்பான்
முரள்வான்
முந்தி அவனை வீழ்த்து
முகம் மார்பு வயிறு கால்கள் கைகள்
எங்கும் அடி
அவன் துடிக்கட்டும்
அவனுக்கு வலிக்கட்டும்
அவன் அழுவான்

அழுகையை மறைப்பவன் எனில் இன்னும் அடி
முடியாத நிலையில்
அம்மா என அலறுவான்
செவிடனாய் இரு

ரத்தம் கசியும்
சதைகள் கிழியும்
சில எலும்புகளும் நொறுங்கக் கூடும்
அதைப் பற்றி கவலைப் படாதே
கொஞ்சம் கொஞ்சமாய் மயங்கி விடக் கூடும்
அதற்குள் உன் இறுதி ஆயுதத்தை எடு

அது ஒரு இரும்பு குழாயாகவோ
கூரிய கத்தியாக
அரிவாளாகவோ இருக்கலாம்
துடிக்கத் துடிக்க கொல்

அதன் பிறகு ஒரு நொடி கூட
அவனைப் பார்க்காதே
வலிகளோடு அவன் இறந்து விடுவான்

ஒரு வேளை நீ சில நொடிகள்
அதை பார்க்கக் கூடும் எனில்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவும்
அவன் வலிகளை சுமக்க நேரிடும் ...

No comments: