பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 3, 2012

எரிதல் என்பது...

புகைப்படம்: மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு 
பூத்திருக்கும் மலர்கள் 
மரங்களின் பறவைகள்  
நுண்ணுயிர்கள் 
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை 
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான் 
என் ஆசைகள் 
என் கனவுகள் 
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே... 
நாளை காட்டிலும் என்னிலும்  
சாம்பல் மிஞ்சியது என்பது 
வெறும் செய்தி மட்டுமே அல்ல...
மெல்ல மெல்ல பற்றி எரிகிறது அக்காடு
பூத்திருக்கும் மலர்கள்
மரங்களின் பறவைகள்
நுண்ணுயிர்கள்
கவலைப் பட்டதாகத் தெரியவில்லை
காற்று வீசுமிடமெல்லாம்
அதனையும் சேர்த்தபடி எரிக்கத் துவங்கியது
அவளும் அப்படித்தான்
என் ஆசைகள்
என் கனவுகள்
வாழ்வு என எரிக்கத் துவங்கினாள்
காதல் அதன் போக்கில் எரிந்தபடியே...
நாளை காட்டிலும் என்னிலும்
சாம்பல் மிஞ்சியது என்பது
வெறும் செய்தி மட்டுமே அல்ல...

No comments: