பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 29, 2011

தொலைத்து விட்ட சித்திரங்கள்...


பேருந்தில் குழந்தையொன்று
பின் நோக்கிச் செல்லும்
மரங்களுடனும்
செடிகளுடனும்
பேசிக்கொண்டே வந்தது...
காற்றில் அலையும்
கைகளில் புதிதாய்
சிதறிக் கொண்டிருந்தன
பல நூறு வண்ணங்கள்...
புன் சிரிப்பில்
தெறித்து விழுகிறது
காணமல் போயிருந்த
நிலவொன்று...
யாருக்கும் புரியாமல்
போக
நான் ரசித்து கொண்டிருந்தேன்
அதன் விரல்களில்
உருவாகி மாறிக் கொண்டே
இருந்த
சித்திரங்களை...
ஒரு வேளை
நானும் தொலைத்திருக்கலாம்
அக் குழந்தை ரசித்துக்
கொண்டிருக்கும்
இயற்கையின் ரகசியங்களை...