பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 26, 2011

பலி



மெய்மையும் பொய்மையும்
இரண்டற கலந்து விட
தனிமை வெளி
நிலவின் கொஞ்சலாய்
தாயின் மடியாய்
வண்ணத்துப் பூச்சி ஒன்றின் இறகுகளாய்
கனவுகளின் வர்ணங்களாய்
இரவு விளக்கின் மெல்லிய ஆறுதலாய்
இன்னும் இன்னும்
அனைத்துமாய் ஆன பின்
யதார்த்த வாழ்வின்
விரிசல்களில் தொடங்குகிறது
நமக்கான கண்ணீர் ஊர்வலம்
முகம் காணமுடியா பொழுதுகள்
வறண்ட புன்னகையின் சிதைவுகள்
மூடப் பட்ட பாத்திரத்தின்
கொதிக்கும் நீரென நிமிடங்கள்
நிழல் கொடுக்க மறுக்கும்
மரமொன்றில் கூடு தேடும் தனிப் பறவையாய்
வெறுமை சுவற்றில்
கரிக்கோடுகளாய் கனவு வெடிப்புகள்
கொடுக்க எதுவும் இல்லாததால்
பெறவும் தகுதி இல்லாதவனாய்
சில நினைவுகள் தொலைக்க
வாழ்வை பலியிட தொடங்குவேன்
தொலைக்க முடியா சில நினைவுகளுக்கு
என்னையே பலிகொடுக்கலாம் நான்...