பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2012

புரிதல்கள் அர்த்தமற்றவை...

 புகைப்படம்: எல்லாப் பூக்களோடும் 
சண்டையிடும் 
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன் 
ஒளித்து வைத்துக் கொள் 
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து 
திரிகிறது 
பொய்களென மாறியபடி... 

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்  
சில நேரங்களில் நானாகவும் 
பல நேரங்களில் நீயாகவும்.... 

நீயாக இருப்பதன் கொடுமை 
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்... 

புரிதல்கள் அர்த்தமற்றவை 
அவை  வண்ணத்துப் பூச்சியினை  
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
எல்லாப் பூக்களோடும்
சண்டையிடும்
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன்
ஒளித்து வைத்துக் கொள்
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து
திரிகிறது
பொய்களென மாறியபடி...

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்
சில நேரங்களில் நானாகவும்
பல நேரங்களில் நீயாகவும்....

நீயாக இருப்பதன் கொடுமை
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்...

புரிதல்கள் அர்த்தமற்றவை
அவை வண்ணத்துப் பூச்சியினை
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
 

No comments: