பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2012

அலங்காரம்

 புகைப்படம்: நீ  தழுவியபடி 
இருக்கும் போதும் 
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில் 
சுகப் பட்டது நீயாக  இருக்கலாம் 
கூரிய  பற்களும் 
வளர்ந்த நகங்களுமாய் 
கீறல்கள் உடலெங்கும் 
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில் 
அலங்கரிக்கப் பட 
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை 
சட்டங்களிட்டு அலங்கரித்து 
வரவேற்பறையில் மாட்டி வை 
உன்னை ரசிகனென்று 
பாராட்டுவார்கள்....
நீ தழுவியபடி
இருக்கும் போதும்
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில்
சுகப் பட்டது நீயாக இருக்கலாம்
கூரிய பற்களும்
வளர்ந்த நகங்களுமாய்
கீறல்கள் உடலெங்கும்
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில்
அலங்கரிக்கப் பட
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை
சட்டங்களிட்டு அலங்கரித்து
வரவேற்பறையில் மாட்டி வை
உன்னை ரசிகனென்று
பாராட்டுவார்கள்....

No comments: