பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 13, 2012

நாத்திகன்...

பூக்கள் மலரும் போதும்
பறவைகள் சிறகு விரிக்கும் போதும்
பாம்பொன்று தன் சட்டை கழற்றுதல் போலும்
எந்த வித ஒலியுமின்றி
விரிகிறாய் எனக்குள் நீ...

வாழ்வெல்லாம் துடித்துச்
சாவதை விட
ஒற்றை நொடியில் இறந்து கிடக்கலாம்
சில மாதங்களாவது
நீ என்னை நேசிக்காமல் இருந்திருந்தால்...

கடவுளை தேடுபவன் ஒருவனை சந்திக்கிறேன்
வரும் வழியில் அவன் நாத்திகனாக இருந்தான்
ஒரு திறந்து கிடந்த சன்னலில்
உன் முகத்தை பார்த்திருக்க வேண்டும்
அவன் இனி கடவுளை பார்த்தென்ன...

ஒற்றைப் பனைமரக் கள்ளும் புளித்த மாவடுவுமாய்
அமர்ந்திருக்கும் ஒருவனுக்கு இதெல்லாம் புரியாது
அவனுக்குத் தேவையெல்லாம்
இன்னுமொரு பாட்டிலும்
தன்னிலை மறக்கும் போதையும்...

No comments: