பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2007

சில வினாடிகள் -3


தெரு விளக்கும்

இந்த காகிதமும் பேனாவும்

இருக்கும் வரை

உன்னையும் என்னையும்

யாராலும் பிரிக்க முடியாது.......


செடிகளில் பூக்கும்

மலர்களை நீ

ரசிக்கிறாய்

மண் மூடி கிடக்கிற

வேர் போல் என் காதல்.....


என் இளமை பருவம்

எழுதிய கவிதைக்கு

நீ கொடுத்த தலைப்பு

முற்று புள்ளி.....


உன்னுடைய இமைகளை

கொஞ்சம் சேர்த்து வை

இரவு எப்படி இருக்கும் என

மறந்து போய் விட்டது....


தூங்காமலேயே கனவுகள்

வலம் வருகிறததடி

உன்னால்

என் வாழ்க்கை கனவாகி

போனதால்.....


எதற்கும் மற்றவர்களிடம் இருந்து

விலகியே இரு

என்னை போல வேறு

யாராவது ஒருவனும்

கவிதை எழுத போகிறான் .....


தீக் குச்சியாக இருந்தவன் தான்

நீ என் இதயத்தில்

உரசிய பின்பு தான்

எரிந்து சாம்பாலானேன்......


குயிலின் குரல் தேடி

வந்தவள் தானே நீ

பிறகு ஏன் நிறத்தை பற்றி

கவலை படுகிறாய்...


என் எண்ண காடுகளில்

தீ பற்றி எரிந்தாயடி

உன் குளிரை

போக்கி கொள்ள.....


இளைப்பாறி செல்ல‌

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு....


அழுகையை விட‌

சிரிப்பு தான்

அதிகம் பிடிக்கிறது

நீ எப்பொழுதும் சிரிப்பதால்

நான் எப்பொழுதாவது

சிரிப்பதால்....


என் இதய மேடையில்

நடனமிடுகிறாய்

மிதிபடுகிறேன் என்றாலும்

ரசிக்கவே தோன்றுகிறது....

சில வினாடிகள் -2


கண்ணாடி துண்டுகளுக்கு இடையே

நடந்து கொண்டு இருக்கிறேன்

அதில் படிந்த

என் உதிரம்

துடைத்து விட்டு

முகம் பார்க்கிறாய் நீ.....


என்னை கடக்கும்

போது சூறாவளியாய்

கடக்கும் காற்று

உன்னை கடக்கும் போது மட்டும்

தென்றலாய்

ஒரு வேளை காற்றும்

கூட உன் காதலனோ....


முகம் காட்டும் கண்ணாடி கூட

வெட்கப்பட்டு சிவக்கிறதடி

நீ முகம் பார்க்கும் போது.....


ஒரு காற்றாடி போல

பறந்து கொண்டிருக்கிறேன்

கீழே இருந்து

காதல் நூலால்

நீ தான் இயக்குகிறாய்.....


எதிரொலியாய்

ஒலித்து கொண்டே இருக்கிறது

உன் மறுப்பு குரல்

என் செவிப் பறை

கிழிந்தது கூட தெரியாமல்....


சோர்வு வரும் போதெல்லாம்

எடுத்து பார்த்துகொள்கிறேன்

உன் முதல் பார்வையை.....


காதல் பூக்களை

அறுவடை செய்ய மனமே இல்லை

நட்டு போனது

நீ என்பதால்...


கடிகார முட்கள் கூட

காத்திருக்கிறதடி உன்வரவுக்காய்

நீ வந்தால் தான்

அதற்கும் கூட நல்ல நேரமாம்.....


அழகு என்ற சொல்லுக்கு

பொருள் தேடி அலைகிறேன்

உன்னை பார்த்த பிறகும்.........

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌


என் க‌விதைக‌ளில்

ஒன்றும் இல்லை

வெறும் செடிக‌ளும் ம‌ல‌ர்க‌ளுமே...

சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌...


இர‌த்த‌ம் தோய்ந்த‌ சுவ‌டுக‌ளும்

முலாம் பூசிய‌ முக‌ங்க‌ளும்

என்னோடு சினேக‌ம் கொண்ட‌

நாட்க‌ள் ம‌ற‌க்க‌ முடியாம‌ல்...


ஒற்றை வ‌ழி பாதையில்

என் ப‌ய‌ண‌ம்

குளிர் த‌ரும் நிழ‌லில்

ம‌ன‌ம் ம‌ட்டும் பாலையின் நினைவுக‌ளில்...


நினைக்க‌ கூட‌ வ‌லி தான்

சில‌ உற‌வுக‌ளும்

சில‌ நினைவுக‌ளும்

இருந்தும் நினைப்ப‌தில்

தான் இருக்கிற‌து வாழ்வின் ர‌க‌சிய‌ம்....


நோய் ப‌ட்ட‌வுட‌ன் வெட்ட‌ ப‌டும்

செடி போல‌ சுல‌ப‌ம் இல்லை

ம‌ன‌ங்க‌ளின் துண்டாட‌ல்

இருந்தும் வெட்ட‌ ப‌டுகிற‌து

வார்த்தைக‌ளால்....


என‌வே தான் நான்

என் க‌விதைகளில்

வெறும் செடிக‌ளும் ம‌ல‌ர்க‌ளுமே வைத்திருக்கிறேன்

சில‌ ம‌ர‌ங்க‌ளும் ந‌ட்டு வைக்கிறேன்

ப‌ற‌வைக‌ள் வ‌ரும் என‌...