பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 2, 2011

பிரிவதற்கான காரணங்கள்


சில நேரங்களில்
பிரிவிற்கான காரணத்தை
சொல்லி விட முடியாது...
ஆனால்
ஒருவன் குற்றவாளியாய்
கூண்டில் நிற்கலாம்...
நானாக
ஒப்புக் கொண்டு
தண்டனை பெறுவேன்...
கண்ணீர் காலங்களில்
தொடரும்
என் மீத நாட்கள்...
இனி உன்
சொற்களை கேட்க
முடியாமல் தவிக்கலாம்...
உன் அன்பில்
நனையும் நிமிடங்களை
தொலைக்கலாம்...
வேறு வழிகள் இல்லை
சில நேரங்களில்
நிரபராதிகள்
குற்றவாளிகளாய்
அன்பு கொண்ட
உயிர் ஒன்றுக்காக...
இறுதியாய் பேசிய
வார்த்தைகளுக்கு
மறுப்பு சொல்ல
மாட்டேன்...
நீ என்னை வெறுப்பது
கூட உண்மையாக
இருக்கலாம்...
அது
குற்றவாளியென
நான் பங்கு பெற்ற
நாடகத்தின்
வெற்றி...
இனி கவிதைகள்
முடியும் காலம்
உன்னை எழுதியவனை
எழுதாதே என
சொன்ன உறவுகளின்
காலம்...
உனக்கு
உறவென்றால்
எனக்கும்
உறவுதானே...
...
...
...
...

தண்டனை பெறும்
சில மனங்களில்
புதைந்து கொண்டு
அழுகிறது
உண்மையான சில
பிரிக்கப்படும் நேசங்கள்...

ஆம்
சில நேரங்களில்
பிரிவதற்கான
காரணங்களில் இருக்கும்
உண்மைகளை
சொல்லி விட முடிவதில்லை...