பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 26, 2007

நான் கேவலமானவனே


புதிதாக நான் எதை பற்றி

எழுதப் போகிறேன்

எல்லாமே பழகிப் போய்விட்டது

என் கனவுகளையோ

மகிழ்வுகளையோ

ரணங்களையோ...


கண் நிறைத்த இடங்களையோ

கவர்ந்த பெண்களையோ

ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ

வேறு என்ன இருக்க போகிறது

என் கவிதைகளில்....


என் தவறுகளை மறைத்து

எழுதும் இவற்றில் என்ன உண்மை

இருக்கப் போகிறது

நெருப்பால் சுட்டால் எரிவது போல‌

என் நிதர்சனமும் தினமும்

சுட்டு பொசுக்குகிறது என்னை...


என் கேவலங்கள், காம வக்கிரங்கள்

சுயனலம், பொறாமை மறைத்து

காதலையும்,மலர்களையும்

தென்றலயும் மட்டுமே

எழுதுவதால் நான் என்னில்

யோக்கியமாகி விட முடியாது..


இங்குள்ள அனைவரையும் விட‌

நான் கேவலமானவனே....

கறுப்புமையும், தனிமையும்


நான் கவிதை எழுதும் போது

தீர்ந்து போகும் பேனாவின்

மையை போலவே

அதிவிரைவில் முடிந்து போகிறது

என் காதலின் கனவுகளும்...


பென்சிலின் கறுமையான‌

எழுத்துகளில் வெளிப்படுகிறது

என் தனிமையின் புலம்பல்

என்றபோதிலும்

அவ்வளவு சீக்கிரம்

தீர்ந்து போவதில்லை

பென்சிலின் கறுப்பு மையும்

என் தனிமை குரலும்....