பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 13, 2012

துரோகி...

என்னை துரோகி என்று சொல்
சந்தர்ப்பவாதி என்று முறையீடு
காமுகன் என்று பெயர் சூட்டு
நம்பிக்கை கொல்பவன் என செய்தி பரப்பு
ஆம் நான் அப்படியானவன் தான்
சிறிது நாட்களுக்கு முன்
நான் இப்படியானவன் என தெரிந்திருக்க
நியாயமில்லை தான்
ஏனெனில்
அப்பொழுது
என்னை நேசித்துக் கொண்டிருந்தாய்
நானோ எப்பொழுதும்
ஒரே மாதிரியாக இருக்கிறேன்
பாறைகள் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை
மேகங்கள் உருமாறியபடியே...

No comments: