பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 5, 2012

மன்னிப்பும் தண்டனையும்...

மன்னிப்புகள் கிடைக்குமென்றே
குற்றங்கள் தொடங்குகின்றன
தண்டனைகளும் பெயரளவுக்கே
இன்றோ நீ பேச மறுத்து
விலகி போவதில் தெரிகிறது
என் குற்றங்கள்...

உன் பெரும் கருணையை
எதிர் பார்த்து நிற்கிறேன்
நொடிப் பொழுதில் கடந்து விடுகிறாய்
என்னையும்
என் நினைவுகளையும்
ஒரு புயலென...

என் வேடிக்கைகளும் பரிகாசங்களும்
உனக்கு புதிதல்ல
அது நமக்குள் இருக்க வேண்டும்
என்பதாக இருக்கிறது
உன் வேண்டுதல்
சில நேரங்களில் எனக்கான
லட்சுமணக் கோட்டை தாண்டி விடுகிறேன்...

நீயோ பிடிவாதக்காரியாய்
முகம் மறைத்து
குரல் மறைத்து
தனிமையில் விட்டுச் செல்கிறாய்
எப்பொழுதும் தவறுகளுக்கான தண்டனை
தனிமை படுத்துதல்
என்பதாகவே இருந்துவிடுகிறது...

:-(