பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 14, 2012

முக நூல் 14.07.12

இந்த இரவும் புதிதாய் எதுவும் தந்து விடப் போவதில்லை, உன் நினைவுகளுடன் விழித்திருத்தலைத் தவிர...

விரக்தியின் விளிம்பில் இருக்கும் போது இயல்பான நகைச்சுவை கூட கேலி செய்வதாகவே தோன்றுகிறது.... 

உன்னுடைய நேசத்தை ஒளித்து வை, இன்னொரு ஜென்மத்திற்கும் போதுமானதாகவே இருக்கும் உன் மீதான என் நேசம்...

மணலில் மட்டுமல்ல மனதிலும் பதிகிறது உன் கால் தடங்கள்... 








ஒளித்து வைத்த
குடுவைகளை எடுத்துத் தருகிறாள்
சனிக்கிழமை மதியப் பொழுதொன்றில்
எப்பொழுதும் போல்
அதில் பாதியே இருக்கிறது
மீதியை அடுத்த வாரத்திற்கென
மறைத்து வைத்திருக்கிறாள்
என்றே நம்புகிறேன்
நீங்களும் அவ்வாறே...


No comments: