பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 3, 2007

சில வினாடிகள்








தூண்டில் புழுவாய்



மீன்களே -அவள் விழிகள்



மாட்டிக்கொண்டது



என் வாழ்வு...



-------------------------------------------------



-----------------------------------------------------






நெடு தொலைவு நடந்த பின்



தெருவிடம் சொன்னேன்



"நாளையும் வருவேன்"



தெரு என்னிடம் சொன்னது



"வா இன்றைய நினைவுகளை விட்டு விட்டு"



----------------------------------------------------------------------



-------------------------------------------------------------------------------






புல்லாங்குழல் இசை



இனிமை புதிதாய்



செய்ய வேண்டும்



மூங்கில் ஒன்றை வெட்டி சாய்த்து....



--------------------------------------------------------------------



---------------------------------------------------------------------------






உப்பில்லாத தயிர் சாதம்



இனிக்கிறது



தொட்டு கொள்ள உன் நினைவுகள்....



------------------------------------------------------------



--------------------------------------------------------------------






சரியாக தவற விடுகிறேன்



என் நினைவுகளை



உன் காலடி சுவடுகளில்.....



------------------------------------------------------



--------------------------------------------------------------






முதுகில் இறக்கை முளைக்க



பறந்து திரிந்தேன்



அருகில் வண்ணத்து பூச்சி



யாரை விட்டது ஏக்கம்.....



----------------------------------------------------



--------------------------------------------------------------






பக்கத்து தோட்டக்காரர்



பழக்கமாகி போனார்- நான்



மாங்காய் திருடிய போது



கட்டி வைத்து அடித்த



அந்த நாளில்.....



---------------------------------------------------------



----------------------------------------------------------------






நிலவில் குடியேறிய



மனிதன் குழந்தைக்கு



சோறு ஊட்டினான்- அழகிய



பூமி பந்து காட்டி...



------------------------------------------------------



--------------------------------------------------------------






எல்லோரும் நெருக்கமாய் தான்



இருந்தோம்



புகைப் படத்தில்



சிரிக்கும் போது மட்டும்....



----------------------------------------------------------------



----------------------------------------------------------------------






என் உறக்கத்தில்



கனவுகள் இல்லை



கனவுகளில் மட்டுமே



என் உறக்கம் இருந்தது.....



------------------------------------------------------------



------------------------------------------------------------------------






கூந்தலில் பூ சூடினாய்



குழப்பம் தேனீக்களுக்கு



தேன் எந்த இதழ்களில்......



-------------------------------------------------------------------



-----------------------------------------------------






தொலைவில் ஒரு விண்மீன்



கண் சிமிட்டுகிறது



மின்மினிகளின் விருப்பதிற்க்கு...



--------------------------------------------------------------



----------------------------------------------------

காதல் தூக்கு....


எப்பொழுதோ நிகழ்ந்த

மூன்றாம் பிறை

நாளின்சந்திப்பு

இருவருக்கும் முக்கியமாகி போனது

கண்கள் சந்தித்த

அந்த சில நொடிகளில்.....

கையில் கிடைத்த

சிறு சணல் குப்பைகளை

விருப்பமாய் கொண்டு

பின்னபபட்டது காதல் கயிறு...

சரியாய் பொருந்தியது

அவரவர் குரல் வளைக்கு!!

தலைகள் தவிர்த்து

வெளியேவர மனமின்றி

தொடரும் கதறல்

மூச்சிரைப்பு "நம் காதல்" என்...

தூக்கில் தொங்கிய

பின்அவசர விடுதலைக்காய்

பிரார்த்திக்கிறோம்

முகம் தெரியாத

மற்றவர்களின் வருகைக்காய்....

கடந்த காலத்தின் சுகங்கள்

நிகழ் கால சோகங்கள்

இவற்றோடு

புலன்கள் திணறி

வாழ்வின் நிமிடங்கள்.....

காட்டு பூவின் மனத்தை

நுகர செய்து

வாசனைகளை பட்டியலிடும்

கடைசி நேர

உயிர் காற்று....

நதியில் பிடித்த

வண்ண மீன்களை

உன் வீட்டு கண்ணாடி குடுவையிலும்

அதிகாலை பறவையின் குரலை

உன் வீட்டு அழைப்பு மணியிலும்

பூ ஒன்றின் மென்மையை

உன் வீட்டு தோட்டத்திலும்

கண்டு கொண்டாடிய

என் நேற்றைய வினாடிகள்

இதமாக்குவது போல்

இறுக்கமாக்கி போகிறது

தலைகளை...

நிச்சயமாய்

இருந்து விடாத

புத்தகம் ஒன்றையும்

சொல்லாத வார்த்தைகளை

சொல்லவும்அடிக்கடி வந்திருக்கிறேன்

உன்னிடம்....

இன்றோடுமுடிந்து

விடப்போகிறது என்நினைக்கும்

இறுக்கம் தொடர்ந்து

கொண்டே இருக்கிறது

நிகழ் கால கனவுகளின்

நிஜமானஇறுக்கத்தில்....