பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 28, 2011

காத்திருக்கிறான் ஒருவன்...


உனக்கான கவிதையின் முதல் வரியில்
ஒரு விதை நடப் படுகிறது
இரண்டாவது வரி தானே நீருற்றுகிறது
மூன்றாவது வரியில் முளைவிட்டு துளிர்க்கிறாய்
நான்காம் ஐந்தாம் வரிகளில்
இலைகள் பரப்பி கிளைகள் விரிக்கிறாய்
பின் வரும் வரிகள் ஒவ்வொன்றும்
பருவ மாற்றமென மாறி
பூக்களைத் தூவினாய்
கனிகளை தந்தாய்
உன் கிளையில் நீ ரசித்த இசையொன்றை
பாடிக் களைத்த பறவையென நானும்
உன்னுள் வசித்திருக்க
கடைசி வரியொன்றில் காத்திருக்கிறான்
கையில் தாலிக் கோடரியுடன் ஒருவன்...