பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 10, 2011

நீ சொன்ன வாழ்த்து

பிறந்தநாட்கள் ஒவ்வொரு வருடமும் வருகிறது
இனிமையாய் கழியும் இன்று
நீ சொன்ன வாழ்த்துக்களால்...
நீ வாழ்த்துச் சொல்லுவாய் என்றால்
எத்தனை முறை வேண்டுமானாலும் பிறக்கலாம்...
நண்பர்கள் உறவுகள் வாழ்த்துகளுடன்
அலங்காரமாய் என்னை சுற்றி
பறக்கிறது உன் சொல் பறவைகள்...
முன்பெல்லாம் பிறந்த நாட்கள்
முடிவு நாட்களின் முகவரி என்றவன் தான்
இன்று தெரிகிறது உன்னை நேசிக்க பிறந்தவனென்று...
ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி
நிமிடங்களுக்கு ஒருமுறை பிறக்கிறாய் எனக்குள்
மெல்லிய மழையின் சாரலாய்
எனை வாழ்த்திப் போகிறது உன் அன்பு
என் இதயத்துள் கருவாகிறாய் நீ...
ஆயிரம் வாழ்த்துகள் பெற்றாலும்
நள்ளிரவில் என் தூக்கம் கலைத்து
ஈர முத்தம் பதித்து நீ வாழ்த்துச் சொல்லும்
ஒரு பிறந்த நாளுக்காய்
தவமிருக்கிறது என் பிறந்தநாள் ஒன்று...
நாட்காட்டிகள் காத்திருக்கின்றன
நீயும் நானும் பிறந்த தினங்களை காட்டிட
நாம் பிறந்த தினத்தை ஒளித்துக் கொண்டு
கண் சிமிட்டி ரசிக்கிறது காதல்...