பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 2, 2012

அலங்காரம்

 புகைப்படம்: நீ  தழுவியபடி 
இருக்கும் போதும் 
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில் 
சுகப் பட்டது நீயாக  இருக்கலாம் 
கூரிய  பற்களும் 
வளர்ந்த நகங்களுமாய் 
கீறல்கள் உடலெங்கும் 
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில் 
அலங்கரிக்கப் பட 
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை 
சட்டங்களிட்டு அலங்கரித்து 
வரவேற்பறையில் மாட்டி வை 
உன்னை ரசிகனென்று 
பாராட்டுவார்கள்....
நீ தழுவியபடி
இருக்கும் போதும்
அறை வெக்கையாக இருக்கிறது
திரும்பிப் படுத்தலில்
சுகப் பட்டது நீயாக இருக்கலாம்
கூரிய பற்களும்
வளர்ந்த நகங்களுமாய்
கீறல்கள் உடலெங்கும்
காலையில் உன் சமாதானப் பூச்சுகளில்
அலங்கரிக்கப் பட
நான் ஒன்றும் பொம்மையல்ல
உதிர்ந்த மயிலிறகுகளை
சட்டங்களிட்டு அலங்கரித்து
வரவேற்பறையில் மாட்டி வை
உன்னை ரசிகனென்று
பாராட்டுவார்கள்....

புரிதல்கள் அர்த்தமற்றவை...

 புகைப்படம்: எல்லாப் பூக்களோடும் 
சண்டையிடும் 
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன் 
ஒளித்து வைத்துக் கொள் 
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து 
திரிகிறது 
பொய்களென மாறியபடி... 

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்  
சில நேரங்களில் நானாகவும் 
பல நேரங்களில் நீயாகவும்.... 

நீயாக இருப்பதன் கொடுமை 
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்... 

புரிதல்கள் அர்த்தமற்றவை 
அவை  வண்ணத்துப் பூச்சியினை  
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
எல்லாப் பூக்களோடும்
சண்டையிடும்
வண்ணத்துப் பூச்சி நான்...

நான் சதிகாரன்
ஒளித்து வைத்துக் கொள்
உன் உண்மைகளை...

உண்மைகள் வேடமணிந்து
திரிகிறது
பொய்களென மாறியபடி...

மாறிக் கொண்டே தான் இருக்கிறேன்
சில நேரங்களில் நானாகவும்
பல நேரங்களில் நீயாகவும்....

நீயாக இருப்பதன் கொடுமை
நானாக இருக்கும் போது
உனக்குப் புரியலாம்...

புரிதல்கள் அர்த்தமற்றவை
அவை வண்ணத்துப் பூச்சியினை
பட்டுக் கூட்டுக்குள் அடைக்கும்....
 

ஒத்திகை...

 புகைப்படம்: அவன் ஒரு தற்கொலைக்கு 
தயாராகி இருந்தான் 
இறந்து போய்விட 
அவன் ஒத்திகை பார்த்தான் 
மூச்சை நிறுத்தி 
ஒரு நிமிடம் தாக்குப் பிடித்தான்
பைத்தியகாரத் தனம் என்று  
சிரித்து ரசித்துக் கொண்டான்
தனக்குப் பிடித்தமான பாடல்  ஒன்றை 
பாடினான் 
விரல்களால் இசையமைத்தான் 
உறவுகளை நினைத்து 
கண்ணீர் கசிந்தான் 
பிறகு சொல்லிக் கொண்டான் 
நானே உலகம் 
நானே அதன் அரசன் 
கைகளைக் குவித்து 
கண்ணாடியை உடைத்து விட்டு 
காயத்துக்கு  மருந்திடத் தொடங்கினான்....
 
அவன் ஒரு தற்கொலைக்கு
தயாராகி இருந்தான்
இறந்து போய்விட
அவன் ஒத்திகை பார்த்தான்
மூச்சை நிறுத்தி
ஒரு நிமிடம் தாக்குப் பிடித்தான்
பைத்தியகாரத் தனம் என்று
சிரித்து ரசித்துக் கொண்டான்
தனக்குப் பிடித்தமான பாடல் ஒன்றை
பாடினான்
விரல்களால் இசையமைத்தான்
உறவுகளை நினைத்து
கண்ணீர் கசிந்தான்
பிறகு சொல்லிக் கொண்டான்
நானே உலகம்
நானே அதன் அரசன்
கைகளைக் குவித்து
கண்ணாடியை உடைத்து விட்டு
காயத்துக்கு மருந்திடத் தொடங்கினான்....
 

கசியும் துளி...

ஒரு நேசத்தையோ
ஒரு சோகத்தையோ
ஒரு ஆற்றாமையையோ
கொண்டிருக்கலாம்
யாருமற்ற தனிமையில்
கசியும் ஒரு கண்ணீர் துளி...
 

அவள்.... மழை!!!

 புகைப்படம்: உன்னில் மையம் கொண்டு 
என்னில் பொழிகிறது 
உனக்கான மழை...

அவள் மழை 
அவள் குளிர் 
அவளே கதகதப்பு...

ஒரு மழை 
ஒரு முத்தம் 
ஒரு நனைதல்....

நான் ஒரு மழைப் பறவை 
அருந்தும் துளிகளில் 
உன் நினைவு...

ஒவ்வொரு துளியும் 
ஒரு கடல் 
நீ சமுத்திரம்...

இன்னுமொரு மழை நாளில் 
அதே நீ 
அதே நான் 
கரையும் நினைவுகள்....
 
உன்னில் மையம் கொண்டு
என்னில் பொழிகிறது
உனக்கான மழை...

அவள் மழை
அவள் குளிர்
அவளே கதகதப்பு...

ஒரு மழை
ஒரு முத்தம்
ஒரு நனைதல்....

நான் ஒரு மழைப் பறவை
அருந்தும் துளிகளில்
உன் நினைவு...

ஒவ்வொரு துளியும்
ஒரு கடல்
நீ சமுத்திரம்...

இன்னுமொரு மழை நாளில்
அதே நீ
அதே நான்
கரையும் நினைவுகள்....