பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 8, 2007

கண்ணெதிரே அவலம், கொதிக்கும் மனம்...

தினமும் நான் சந்திக்கும் அவலங்களை, வேதனை கொடுக்கும் நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறேன்.

அவன் எனக்கு மேல் அதிகாரி, சரளமாக 6 மொழிகள் பேசுபவன், வயது 50 ஐ நெருங்குகிறது. வீடு, மனைவி, மகன் என உறவுக்கு ஒரு முகம், பதவியில் இருப்பவன் என் ஊருக்கு ஒரு முகம்... இருந்தும் இன்னொருமுகமும் உண்டு...

அவன் காம லீலைகளின் முகம்...பல பெண்களின் வாழ்வில் விளையாடும் இவன் திருமணம் ஆன, ஆகாத இளம் பெண்களை இலக்ககாக கொண்டு தான் காய்களை நகர்த்துக்கிறான்.பணம், பரிசு, செல் பேசி இவை அஸ்திரங்கள்...பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக தன் பெண்களை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் கதி என்ன?தற்போது ஒரு இளம் பெண் வயது 23-25 குள். அந்த பெண்ணுக்கும் இதே பரிசுகள், உடைகள், செல் பேசி... இதற்காக அந்த பெண் விட்டு கொடுத்திருப்பது தன் கற்பை...
பணம், வசதி, உல்லாச பயணங்கள் இவற்றுக்கு மேலாக தான் உடல் பசி என் தொடருகிறது... இல்லை அன்பு தான் தேவை என்றால் விடுதிகளில் என்ன வேலை.. தாய், தந்தையிடம் கிடைக்காத அன்பு இவனிடம் கிடைக்கிறதா என்ன.... ஒரு சகோதரி இருப்பதாக தெரிகிறது... அவரும் இவ்வாறே செய்தாள் ஒப்பு கொள்ளுவாரா?

பெற்றொருக்கு தெரிந்தால் என்னவாகும்...பெரும்பாலும் ஏழை தமிழ் குடும்பங்கள் மானம் மட்டுமே உயிர் என கருதி வாழ்பவர்கள். அவர்களுக்கு அந்த பெண் எப்படி பெயர் வாங்கி தர போகிறாள். தன்னை திருமணம் செய்து கொள்ள போகும் ஒரு இளைஞனின் கனவுகளை எப்படி உண்மையாக்குவாள்... அவனும் இதே போல பல பெண்களை பார்த்திருந்தால் எப்படி இருக்கும்?

அந்த காம வெறி பிடித்தவனுக்கு, தான் மனைவியிடம் கிடைக்காத சுகம் அப்படி என்ன மற்ற பெண்களிடம் கிடைக்க போகிறது. புதிது புதிதாய் ரூசிக்க நினைக்கும் இவன் மனிதனா? இல்லை மார்கழி மாத தெரு நாயா? நாளை இவன் ஒரு மனிதனாக சமூகத்தில் தன் பிள்ளைக்கு என்ன கற்று தர போகிறான்... வெறும் ஏட்டு கல்வியா? இவன் மனைவி இவ்வாறு இருந்தால் சரி என சொல்லுவானா?எனக்கு தெரிந்து இந்த அலுவலகத்தில் இவன் துன்பத்தால் வேலை விட்டு போனவர்கள் 2 பேர்.. பெண்கள் வேலைக்கு வர கூடாதா... வந்தால் இந்த ஓநாய்கள் கடித்து பார்க்குமா என்ன!! தன்னிடம் மயங்காதவர்களை வேலை பளுவில் துடிக்க வைக்கும் வக்கிரம் அட டா.. கொடுமை...

இதை என் இயக்குநர் பார்வைக்கு கொண்டு சென்றார் ஒரு பெண்.. வெறும் விசாரணை, கண் துடைப்புகள்... அவர்களுக்கு அமெரிக்க டாலர், ஈரோப்பிய யூரோ இவை மட்டுமே முக்கியம். தன் பிள்ளைகள் இவ்வாறு பாதிக்க பட்டால் இப்படி இருப்பார்களா என்ன? பணத்திற்காக கற்பை விற்கும் கூட்டம் தானே அது!!!

இன்னும் தொடர்கிறது அக் கொடியவன் ஆட்டம்....

இவர்களுக்கு மத்தியில் நான்..? என்ன செய்வது... கொலை வெறி வருகிறது.... இவர்கள் மட்டும் தானா? இன்னும் எத்தனை ஆயிரம் பேர்... தண்டிக்கும் உரிமை எனக்கு உண்டா என்ன.... அப்படி களை எடுக்க ஆரம்பித்தா நான் எங்கு நிறுத்துவது... இந்த அரசாங்கமும், சட்டமும் ஒழுக்கமாக இருந்தால் கூட பரவாயில்லை.. பணம் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே இவை தான்...

மானம், கற்பு இவைகளை விட பணம் பெரிதென நினைக்கும் அதிகாரிகள் என்னை குற்றவாளியாக நிற்க வைப்பார்கள்...முதலாளிக்கு சட்டம் கழிவு நீர் சாக்கடை போல, ஊத்தி கழுவி விடுவார்கள்.... இந்த சமூகமும் ,என் வீடு எரியும் போது நான் பார்த்துக்கொள்வேன் என்கிற மன நிலையில் இருக்கிறது... எப்பொழுது மாறும் இந்த எண்ணம்...

என் தோழியிடம் சொன்னேன், அவள் சொன்னாள் கண்களை மூடி கொள்... மேலும் அது அவன் தவறல்ல அந்த பெண்ணின் தவறு... இடம் கொடுக்கிறாள் அவன் போகிறான்... புத்தி எங்கே போனது... அவள் குடும்பம் பாவம் இல்லையா என்றேன்... இதை நானோ, நீயோ யோசிக்க தேவை இல்லை... அவள் தான் யோசிக்க வேண்டும்..... " உன் சகோதரி தவறு செய்தாள் திருத்த மாட்டாயா? என்றேன்.... எனக்கு வரும் போது பார்க்கலாம்.... வேறு ஏதாவது பேசு என முடித்து கொண்டாள்....

என் தோழன், நீ ஒன்றை பார்க்கிறாய்!!!, நான் பார்த்து பார்த்து பழகியவன்... என்ன செய்ய தனி மனித கோபம் வெறும் இயலாமையில் தான் முடியும்... அவர்களுக்கு பிடித்திருக்கிறது... உன் பார்வைக்கு குற்றம் என்றால் நீ விலகி இரு... இங்கு எல்லோருக்கும் தெரியும் தவறுகள் தான் என்று... ஆனாலும் அது தொடரும்... உன் குடும்பம் பற்றி நீ யோசி என்றான்...

காந்தியின் குரங்கை போல நானும் வாழ வேண்டுமா? நம் தமிழ் சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது தவறு தானா? குற்றம் செய்பவனை பார்த்து கொடு தண்டிக்காமல் இருந்தால், அதற்கு நாமும் உடந்தை அல்லவா? சிறு தவறுகளை திருத்தாமல் விட்டு விட்டு, இப்போது பெரிய தவறுகலுக்கு அதிகாரமும் ,பதவியும் கொடுத்து அமர்த்தி இருப்பது யார் ... நாம் தானே......"

சமூக குற்றவாளி உருவாவதில்லை, உருவாக்க படுகிறார்கள்" ( நானுமா )

உங்கள் கருத்துக்கள் தேவை...