பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Aug 30, 2011

வீர வணக்கம் தோழியே...


செங்கொடியே...
செந்தமிழே...
உனைக் கருக்கி உயிர் துறந்து
ஆத்திகனுக்கு கடவுளானாய்
என் போன்றோருக்கு தாயானாய்...
வல்லூறுகளிடம் வரம்
கேட்கும் இழிநிலையில் நாம்...
இங்கே உன் தியாகம்
விற்கப் படுகிறது செய்தி தாள்களில்...
சட்டங்கள் மக்களுக்காக!!
இங்கே சட்டமே கொல்லுமெனில்...
நீ உயிர் பிழைத்திருந்தால்
உன்னையும் ஏதாவது ஒரு
சிறையில் அடித்திருப்பார்கள்
தற்கொலை முயற்சியென...
இனி தெருவில் இறங்கி
உரக்கக் கத்துவோம்
இரங்கா இதயங்களிடம்...
இனியேனும் அமைதியாய் உறங்கு
தமிழுக்காக நீ தந்த உயிரை
தமிழ் உள்ளவரை
நினைவு கொண்டிருப்போம்...

வீர வணக்கம் தோழியே...