பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 17, 2012

முகநூல் 17.07.12

ஒரு அழகான காதலைச்
சுமந்த பொழுதொன்றில்
எடையற்றவனானேன்...

நிலவு பூக்கும்
வனத்தில்
உதிர்ந்து தான் கிடக்கும்
நட்சத்திரங்கள்...

பல கவிதைகள்
உனக்காக எழுதப்படக் கூடும்
சில கவிதைகளோ காத்திருக்கிறது
உன்னால் மட்டுமே
எழுதப் பட வேண்டுமென...

கரடி பொம்மையென
காத்திருக்கிறது
என் காதல்
நீ கட்டிக் கொள்வாயென... 

உன் மீதான நேசத்தை
எத்தனையோ முறை எழுதியாயிற்று
ஒரு முறை கூட
சொன்னதில்லை...