பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 30, 2011

மழைக் குறிப்பு...



பகலெல்லாம் வடிந்து போய்
இரவாகிப்
போனது இன்றைய நாள்...
லேசாக
வெட்டிய மின்னல் கீற்றுடன்
மெல்லிய
தூறலாய் நனைகிறது பூமிப் பந்து....
அசதியாய்
தூங்குகிறாய் நீ
பிள்ளையை
அணைத்துக் கொண்டு...
சப்தமின்றி
கதவு திறந்து
மழை
நுழைகிறேன்
நனைக்கும்
உடையின் ஈரத்தில்
சிலிர்க்கிறது
எனக்கான கனவுகள்...
காலையில்
நிச்சயம் திட்டுவாய்
ஆனாலும்
உன் அக்கறையான கோபத்தை விட
மழைச்
சாரலில் கைகோர்த்து நடக்கத்தான்
என்
மனம் ஆசைப் படுகிறது...
எப்படி
சொல்வது உன்னிடம்?
போனது
போகட்டும்
அடுத்த
மழை வரை சேகரிக்கிறேன்
என்
பால்ய நினைவுகளை மீண்டும்.....