பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 22, 2011

அவதூறு பேச்சாளி

ஒரு சிற்றாறிடம்
கடலைப் பற்றி
ஒரு முறை பேசினேன்
என்னை ஒரு
மிகைப் படுத்தி பேசும்
கற்பனாவாதி எனச்
சிற்றாறு நினைத்தது!

சிற்றாறைப் பற்றி
கடலிடம்
ஒருமுறை பேசினேன்
குறைத்துப் பேசும்
அவதூறு பேச்சாளி என
கடல்
நினைத்தது!!

ஒவ்வொரு
உயர்ந்த மனிதனும்
அவனது முடிவெடுக்கும்
தன்மையில்
ஏதாவதொரு சிறிய ஒன்று
இருக்கும் என
நான் அறிவேன்!
அந்த சிறிய ஒன்று தான்
அவர்களது
செயலற்ற தன்மையை
பித்துக்குளித் தனத்தை
அல்லது
தற்கொலையினை
தடுத்திருக்கிறது!!

யார் நிரபராதி?

நுழைவாயிலில்
எனது விருந்தாளியை
நிறுத்திச் சொன்னேன்
இல்லை;
நீ நுழையும் போது
உன் பாதத்தை
துடைத்துக் கொள்ளாதே;
ஆனால் நீ
வெளியே சென்றவுடன்
துடைத்துக் கொள்;

உனது தேவையாய்
இருப்பதை விட
எனக்கு அதிகம் தேவையாய்
இருப்பதை கொடுப்பதல்ல
கொடை!
என்னை விட உனக்கு
அதிகம் தேவையாய் இருப்பதை
எனக்கு கொடுப்பதே
கொடை!

ஒரு நாள் பசிக்கும்
ஒரு மணி நேர தாகத்திற்கும்
இடையில் உள்ள
வித்தியாசம் தான்
பெரும் பணக்காரனுக்கும்
பரம ஏழைக்கும்
இடையிலுள்ள
வித்தியாசம்...

உன் அறிவுக்கு
எட்டிய மட்டும் தான்
உன்னால்
மற்றவரைப் பற்றி
எடை போட முடியும்
இப்பொழுது சொல்!
நம்மில் யார்
குற்றவாளி
யார் நிரபராதி?

இங்கு
மிகச் சிறந்த ஒழுக்கமாய்
இருக்கும் ஒரு
நற்குணம்
மற்றோர் உலகத்தில்
மிகத் தாழ்ந்த ஒன்றாக
இருக்கலாம்...