பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jan 27, 2012

பூரணமாதல்...


ஒற்றை நேசத்தில் மயங்கிக் கிடக்கிறது உயிர்
அதன் பிரதிகளை தினமும் சேகரிக்கிறேன்
ஒன்று கூட மற்றொன்றின் சாயலின்றி
நினைவுகளில் காதலின் வர்ணம்
குழைத்து வானவில்லென நிறைகிறது மனது
சில வேளைகளில் நாள் முழுதுமாய்
ரசிக்க நேரிடுகிறது அதன் நிறப் பிரிகைகளை
என்னில் துவங்கும் காதல் நதிகள்
உன்னைத் தேடி சங்கமிக்கிறது
நமக்கான கனவுகளைச் சுமந்தபடி
ஒரு படகும் அதில் வரலாம்
பெருங்காடு சூழும் நெருப்பென
எனை எரிக்கிறது உன் காதல்
நினைவு தவற விழுகிறேன் உனக்குள்ளேயே
எரித்த காதலே அணைக்கும் விந்தை
உன்னிடம் மட்டுமே நிகழக்கூடும்
காற்று எந்தச் சுவடையும் விடுவதில்லை
சில நேரம் எல்லாவற்றையும் விட்டு விடுகிறது
உன் காதலும் எதையும் எடுத்ததாகவும் இல்லை
எனக்கென எதையும் விடுத்ததாகவும் இல்லை
காதல் ஒரு பரிபூரணம்
நீ காதலானாய்
நான் அதில் பூரணமானேன்...