பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 16, 2012

முக நூல் 16.07.12



உன் நினைவோடு எதை எழுதினாலும் அழகாகி விடுகிறது... #கவிதை.

கோபத்தில் ஒளிந்திருக்கிறான் சாத்தான்
அவனை நானாக உருவாக்குவதில்லை
அவனை கொன்று விடவும் முடிவதில்லை...

கூர் தீட்டப் பட்ட கத்திகளே அதிகம்
தானாகவும் குத்தலாம்
மறைமுகமாக எறியவும் படலாம்
சாவைக் கண்டு பயந்தவனிடம் சொல்
ஒடிவிடக்கூடும்...

பல கவிதைகள்
உனக்காக எழுதப்படக் கூடும்
சில கவிதைகளோ காத்திருக்கிறது
உன்னால் மட்டுமே
எழுதப் பட வேண்டுமென...

எனக்குள் விழுந்த
ஒற்றைத் துளியாய் நீ
கடலும் வானும்
கலங்கிக் கிடக்கிறது... 

ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டால் அதிலிருக்கும் சுவாரசியம் போய்விடுகிறது... :-(

No comments: