பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Jul 28, 2011

நினைவுத் தூறல்கள்: அவன்....

நினைவுத் தூறல்கள்: அவன்....: "இப்பொழுதெல்லாம் இரவு வந்து விட்டால் நடுங்குகிறது என் மனம் என் இருண்ட அறைக்குள் எவனோ ஒருவன் நுழைந்து விடுகிறான் எதிர்பாரத நொடியொன்றி..."

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...: "என் உலகத்தின் சிறந்த புதிர்களுக்கான பரிசை எப்பொழுதும் நீயே வெல்கிறாய்... வண்ணங்கள் குழைத்து உயிர் பெற்ற ஓவியங்களில் விரயமாகும் கனவு..."

நினைவுத் தூறல்கள்: மெய்

நினைவுத் தூறல்கள்: மெய்: "இன்று முழுதும் நான் உண்மைகளை மட்டுமே பேசினேன் காமத்தின் உந்துதல் ஒரு நொடி என்னை தொடவில்லை என் எதிரிகளை எல்லாம் மன்னித்தேன் உடல் வியர..."

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...

நினைவுத் தூறல்கள்: சில நொடிகள்...: "என் உலகத்தின் சிறந்த புதிர்களுக்கான பரிசை எப்பொழுதும் நீயே வெல்கிறாய்... வண்ணங்கள் குழைத்து உயிர் பெற்ற ஓவியங்களில் விரயமாகும் கனவு..."

அவன்....


இப்பொழுதெல்லாம்
இரவு வந்து விட்டால்
நடுங்குகிறது என் மனம்
என் இருண்ட அறைக்குள்
எவனோ ஒருவன்
நுழைந்து விடுகிறான்
எதிர்பாரத நொடியொன்றில்..
அவன் காலடி ஓசைகளையும்
சுவாசத்தின்
தகிப்பையும்
உணர்கிறேன்
மிக மிக அருகாமையில்...
காமத்தின் வலிமையான
சவுக்கின் வீச்சில்
என்னை
சிதறடித்து
என் கண்களில் குருதி
வழிய உறக்கம்
பிடுங்குவான்....
திடுமென விழிக்கிறேன்
ஒரு பிசாசினைப் போல்
ஓலமிடுகிறது ஒரு குரல்
அவனின் கடுமையான
தாக்குதலில்
நான் வீழ்ந்த பின்னரே
அகலுகிறான்...
மறுநாள்
பயத்துடன்
விளக்கை அணைக்காமலேயே
படுக்கை நுழைகிறேன்
முன்னிரவில்
உறங்கியும் போகிறேன்
நடுநிசி பொழுதில்
கனவென்ற போர்வையில்
மீண்டும் வருகிறான்
அவனே..

சில நொடிகள்...

என் உலகத்தின்
சிறந்த புதிர்களுக்கான
பரிசை எப்பொழுதும்
நீயே வெல்கிறாய்...
வண்ணங்கள் குழைத்து
உயிர் பெற்ற
ஓவியங்களில்
விரயமாகும் கனவுகள்..
எழுத்துகளெல்லாம்
பதுங்கிக் கொள்கின்றன
சொற்களில் கட்டுண்டு,
அனாதையாய் நீள்கிறது
கவிதையொன்று...
சல சலக்கும்
நீரோடையில்
கால் பதிக்கையில்
என்னில் பட்டு
செல்லும் நீர் துளிகள்
குளிர் நீங்கி கொதிக்கிறது...
சந்தேகமில்லை
நானே தான்,
மணிகணக்கில்
தேடுகிறேன் கண்ணாடியில்...
இன்று
உறங்கிப் போகவேண்டும்
என் மனம்
விழித்துக் கொள்ளும்
முன்னதாக...
யாருக்கேனும் கிடைத்தால்
கொடுத்துச்
செல்லுங்கள்
முடிவுறாத என் கவிதையின்
சில வரிகளை...
உதிர்ந்த சருகுகள்
காயும் புல்வெளி
காற்று அற்ற வெளி
இவற்றிலும் வளர்கிறது
அவள் நினைவு...
ஒற்றை அறை
வாடகை வீடு
உறவினர் வருகையில்
பார்வையில்
கசிந்து உதிர்கிறது
காமம்...

மெய்

இன்று முழுதும்
நான் உண்மைகளை
மட்டுமே பேசினேன்
காமத்தின் உந்துதல்
ஒரு நொடி என்னை
தொடவில்லை
என் எதிரிகளை எல்லாம்
மன்னித்தேன்
உடல் வியர்க்க
வேலை செய்தேன்
கனவுகளில்
உன் நினைவுகளே இன்றி
உறங்கிப் போனேன்
ஆனால்....
.
.
.
.
பொய்களை
மட்டுமே
எழுதினேன்...