பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 20, 2011

உடைபடும் தூக்கத்தின் கதவுகள்...

பனி இதழ்களின்
உற்புறத்தின் புதர்களில்
பாய்வதற்கு பதுங்கியிருக்கின்றன
முத்தங்கள்
கனவுகளின் பூட்டை உடைத்து
என் பிரதேசங்களுக்கு
உன்னைக் கடத்தி வருகிறேன்
மூடிய இமையின் இருட்டடியில்
நீ ஒரு ஒளி
உருவமாய் மிதக்கிறாய்
தூங்கும் உடலுக்குள்
ஒரு பூவாய் யாத்திரை செய்கிறாய்
தூக்கத்தின் கதவுகளை
திறந்தே வைத்து
அதன் அறைகளில்
உன் அறிய பயன்களை
நிச்சயித்துக் கொண்டிருக்கிறேன்
காதலின் தோட்டத்தில்
நான் ஒரு பூவாக
பூக்கத் தொடங்கி விட்டேன்
பறித்துக் கொள்ள
உன் விரல்கள்
நடுங்குகிறதா?
அசைகிறதா?

- அய்யப்ப மாதவன்...