பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

ஒ, கடவுளே
முயலை எனது
இரையாக்கும் முன்னர்
என்னைச்
சிங்கத்தின்
இரையாக்கி விடு....

இரவின் பாதையைப்
பாதுகாத்து வைத்து,
ஒருவன்
விடியலை
அடைந்து விட முடியாது...

எனது துன்பத்தின்
ஒரு பகுதியே
சில இன்பங்களின்
மீதான ஆசை
என்பது தான் விசித்திரம்....

உண்மை என்பது
எப்பொழுதும்
அறியப் பட வேண்டியது
சில போது
வாய் விட்டு உரக்க
சொல்லப் பட வேண்டியது...

நம்மிடம் இருக்கும்
உண்மையான இயல்பு
அமைதியாய் இருக்கும்
நம்மால் முயன்று
அடையப்பட்ட ஒன்று
ஓயாமல்
பேசிக் கொண்டிருக்கும்...

No comments: