பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Nov 13, 2011

சிறு துளிகள் - மூன்று

தனிமையில் விடப்பட்ட
பிறகும் செவிகளில்
ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது
உன் குரல்....
விடிய விடிய பேசிக் கொண்டிருந்தோம்,
கூடவே நம்மை ரசித்துக் கொண்டு
மழை....
தனிமை பொழுதுகளிலெல்லாம்
என்னை நீயாக மாற்றி விடுகிறாய்,
சில நேரங்களில் உன்னை நானாகவும்...
மழைக் குளிரால்
நடுங்கிக் கொண்டிருந்தது ஊர்,
நம்மைச் சுற்றி கததப்பாய்
நெருப்பு வளையம் செய்தது காதல்...
மழை நனைந்து,
நீ நம் அறை நுழைகையில்
காதோரம் வழியும் மழைநீரில்
கூடவே இறங்கி தடுமாறுகிறது என் காதல்...
நீயாக இல்லையென்று சொல்லி
பிரிந்து போகும் வரையில்
நான் தந்தையாகத் தான் இருந்தேன்...
விடுகதைகளுக்கு விடைகளை
யோசிக்கும் பொழுதெல்லாம்
கண்களை மூடிக் கொள்ளும் வழக்கத்தை
எங்கு கற்றுக் கொண்டாய் நீ...
ஒரு கவிதையை உனக்கென எழுதி,
உன் வருகைக்கு காத்திருக்கையில்
ஓராயிரம் கவிதைகள் மனதில்...
நானின்றி நீ அங்கு
என்ன நினைப்பாயோ,
அதையே தான் நானும்
இங்கு நினைத்துக் கொண்டிருக்கிறேன்....
நீ இல்லாத சில நாட்களில்
நான் வாழவே இல்லையென்பது
உனக்கு தெரியும் தானே...
கோயிலுக்கும் பொம்மைக்கும்
பெயர் பெற்ற ஊரில் நீ இருந்திருந்தால்,
சிலைகளும் பொம்மைகளும்
உன்னைப் போலவே இருந்திருக்கும்...
நீ என்ன செய்தாலும்
உன்னை விட்டு ஒரு நொடி கூட
விலக விடாதிருக்கிறது
உன் அன்பு...
எப்பொழுதும் இழப்புகளே
மிஞ்சுகிறது சமரசங்களற்ற வாழ்வில்,
இருந்தும் தேடிக் கொண்டுதானிருக்கிறேன்
உன் சுவடுகளை வாழ்வெங்கும்....

No comments: