பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

விழித்த போழ்து அவர்கள்
என்னிடம் சொல்கிறார்கள்
நீயும் நீ வாழும் உலகமும்
ஓர் எல்லையற்ற கடலின்
எல்லையற்ற கடற்கரை மணலின்
ஒரு துகளே ஆகும்
என் கனவில்
அவர்களுக்குச் சொல்கிறேன்
'"நானே எல்லையற்ற கடல்
எல்லா உலகங்களும்
எனது கரையின் மணற் துகள்களே !

No comments: