பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 21, 2011

உதட்டுக்கு வராத முத்தம்...

தோழா...
எப்படி
உன்னால்
சொல்ல முடிந்தது
என்னிடம்?

கல்லூரிப் பாடத்திலிருந்து
காண்டம் ஜோக்
வரையிலும்
பகிர்ந்து கொண்டவன் நீ!

நம் பரஸ்பர
ரசனைகள் பற்றி
பட்டியலிட
பக்கங்கள் போதாது....

கல்லூரி வாரவதியில்
கால நேரமற்று
பேசிக் கொண்டிருந்து
பதறிப் பிரிந்த போதும்...

கடற்கரையில்
விரல் கோர்த்து
அலையில்
நனைந்த போதும்...

வேடிக்கையாய்
என் கன்னத்தில்
வேகமர்றுத்
தட்டிய போதும்...

புறங்கையில்
பூப் போல
நீ இட்ட முத்தத்தின்
போதும் கூட
நான் நினைத்த தில்லை
இப்படி
சொல்லப் போகிறாய்
என்று?

நிறைய
தோழிகளின் காதலுக்கு
பாலமாய் இருந்திருக்கிறேன்
என்பது உண்மைதான்...

ஆனாலும்
நீயும் கூட
உன் காதலை சுமந்து சென்று
மற்றவரிடம் சேர்க்குமாறு,
எப்படி சொல்ல முடிந்தது
என்னிடம்?

எப்போதும்
தூது பெண்களுக்கு
ஏனோ
அமைவதில்லை
காதல்....

- உமா சம்பத்

No comments: