பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2007

சில வினாடிகள் -2


கண்ணாடி துண்டுகளுக்கு இடையே

நடந்து கொண்டு இருக்கிறேன்

அதில் படிந்த

என் உதிரம்

துடைத்து விட்டு

முகம் பார்க்கிறாய் நீ.....


என்னை கடக்கும்

போது சூறாவளியாய்

கடக்கும் காற்று

உன்னை கடக்கும் போது மட்டும்

தென்றலாய்

ஒரு வேளை காற்றும்

கூட உன் காதலனோ....


முகம் காட்டும் கண்ணாடி கூட

வெட்கப்பட்டு சிவக்கிறதடி

நீ முகம் பார்க்கும் போது.....


ஒரு காற்றாடி போல

பறந்து கொண்டிருக்கிறேன்

கீழே இருந்து

காதல் நூலால்

நீ தான் இயக்குகிறாய்.....


எதிரொலியாய்

ஒலித்து கொண்டே இருக்கிறது

உன் மறுப்பு குரல்

என் செவிப் பறை

கிழிந்தது கூட தெரியாமல்....


சோர்வு வரும் போதெல்லாம்

எடுத்து பார்த்துகொள்கிறேன்

உன் முதல் பார்வையை.....


காதல் பூக்களை

அறுவடை செய்ய மனமே இல்லை

நட்டு போனது

நீ என்பதால்...


கடிகார முட்கள் கூட

காத்திருக்கிறதடி உன்வரவுக்காய்

நீ வந்தால் தான்

அதற்கும் கூட நல்ல நேரமாம்.....


அழகு என்ற சொல்லுக்கு

பொருள் தேடி அலைகிறேன்

உன்னை பார்த்த பிறகும்.........

No comments: