பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

கவிதையும், காதலும்

காதலாய் இருப்பதில்லை
கவிதை..
கவிதையாய் இருப்பதில்லை
காதல்...

இருப்பினும்
காதலுக்குள் கவிதை இருக்கிறது
கவிதைக்குள் காதல் இருக்கிறது

வெயிலில் நடக்கும் தன் காதலியின்
பாதம் கண்டு பதறும் காதலன்
மனம் கூட கவிதை தான்...

நல்ல கவிதையின் சுகத்தில்
கண்மூடி கிடப்பவனுக்குள்ளும் காதல் தான்..

கவிதையும், காதலும் அற்ற
சமூகம் வெறும் நிலபரப்பே
இன்றி வேறு என்ன?

No comments: