பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 10, 2007

சில வினாடிகள் -3


தெரு விளக்கும்

இந்த காகிதமும் பேனாவும்

இருக்கும் வரை

உன்னையும் என்னையும்

யாராலும் பிரிக்க முடியாது.......


செடிகளில் பூக்கும்

மலர்களை நீ

ரசிக்கிறாய்

மண் மூடி கிடக்கிற

வேர் போல் என் காதல்.....


என் இளமை பருவம்

எழுதிய கவிதைக்கு

நீ கொடுத்த தலைப்பு

முற்று புள்ளி.....


உன்னுடைய இமைகளை

கொஞ்சம் சேர்த்து வை

இரவு எப்படி இருக்கும் என

மறந்து போய் விட்டது....


தூங்காமலேயே கனவுகள்

வலம் வருகிறததடி

உன்னால்

என் வாழ்க்கை கனவாகி

போனதால்.....


எதற்கும் மற்றவர்களிடம் இருந்து

விலகியே இரு

என்னை போல வேறு

யாராவது ஒருவனும்

கவிதை எழுத போகிறான் .....


தீக் குச்சியாக இருந்தவன் தான்

நீ என் இதயத்தில்

உரசிய பின்பு தான்

எரிந்து சாம்பாலானேன்......


குயிலின் குரல் தேடி

வந்தவள் தானே நீ

பிறகு ஏன் நிறத்தை பற்றி

கவலை படுகிறாய்...


என் எண்ண காடுகளில்

தீ பற்றி எரிந்தாயடி

உன் குளிரை

போக்கி கொள்ள.....


இளைப்பாறி செல்ல‌

என் இதயம் தானா

கிடைத்தது உனக்கு....


அழுகையை விட‌

சிரிப்பு தான்

அதிகம் பிடிக்கிறது

நீ எப்பொழுதும் சிரிப்பதால்

நான் எப்பொழுதாவது

சிரிப்பதால்....


என் இதய மேடையில்

நடனமிடுகிறாய்

மிதிபடுகிறேன் என்றாலும்

ரசிக்கவே தோன்றுகிறது....

No comments: