பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

மெளனத்தின் இசை

இசை... எத்தனை இதயங்கள் வசப்படுகின்றன இந்த ஒற்றை வார்த்தையின் வசீகரத்தில்... மனிதர்களின் மகிழ்வையோ, சோகத்தையோ கூட பிரதிபலித்து போகிறது இசை... அதில் தான் எத்தனை எத்தனை வகைகள்... மனதை வருடும் மெல்லிசை, தாளம் போட வைக்கும் மெட்டுகள், ஆட தூண்டும் நடன இசை,உரையாடல்களுக்கு இனிமை சேர்க்கும் பின்னிசை..... இன்னும் இன்னும்.... சாதாரண மூங்கிலை பார்க்கும் விறகு வெட்டிக்கும், புல்லாங்குழல் வாசிப்பவனுக்கும் வேறுபாடிருக்கிறது.. பானை செய்யும் தொழிலாளிக்கும், அதை கடமாய் மாற்றி இசை எழுப்புபவனுக்கும் இடைவெளிகள் இருக்கிறது... மாடு வெட்டி இறைச்சி விற்பவனுக்கும், அதன் தோலை மத்தளமாய் மாற்றி மங்கலம் இசைப்பவ்னுக்கும் வித்தியாசங்கள் ஆயிரம்...
இவர்கள் அனைவரையுமே தன்னிலை மறக்க வைக்கிறது இசையின் மெல்லிய தழுவல்கள்... இவற்றை தாண்டி நிற்கும் சில நேரம் நாட்டு புற கலைஞனின் தனி குரலும், குழந்தைக்கென பாடும் தாயின் தாலாட்டும்...
விவரிக்க இயலாமல் தனித்து கிடந்த என்னை அனைத்து லயங்களிலும் கட்டி ஒற்றை நொடியில் இழுத்து போட்டு வேடிக்கை பார்க்கிறது உன் மெளனத்தின் இசை....
அது உயிரின் இசை.....

No comments: