பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

காதல் அரசி

பெண்ணே, நீ யார் என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது... குழம்பி திரிவேன்... பிறகு தான் தெரிந்தது நீ காதல் தேசத்தின் அரசி என்பது... இது வரை வரலாறுகள் அனைத்தும் உலகின் பெண்கள் பலரை காதலின் இள்வரசிகளாகவே அங்கீகரித்து வந்திருக்கிறது... அரசிக்கான இடம் மட்டும் நிரப்பபடாமலேயே... நீ ஜனிக்கும் அந்த நாள்வரை...
மணிமகுடங்கள் தேடி செல்லும் அரசர்களுக்கும், வீரர்களுக்கும் மத்தியில் காதலின் கீரீடம் மட்டும் உன்னை தேடி வந்து தன்னை அலங்கரித்து கொண்டது... மற்றவர்களெல்லாம் வழிவிட்டு நின்றதை பார்த்திருக்க மாட்டாய், நான் அறிவேன்... அனைவரும் ஏக்கதுடனும், பொறாமையுடனும் பார்த்து கொண்டிருக்கும் போதே காதல் உன்னை அரசியாக ஏற்று தன்னை என்றும் நிலை நிறுத்திக் கொண்டது.உன் முக பொலிவின் முன் காதல் கூட சற்றே வெளிச்சம் குறைந்தது உண்மை தான்.
பெண்ணே இனி நீ எச்சரிக்கையாய் இரு.. உனக்கான சுயம்வரத்தில் காத்து கிடக்கும் இளைங்ஞர்கள் எத்தனையோ எனக்கு தெரியாது....

No comments: