பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Oct 16, 2007

மழை

மெல்லிய மழை அமைதியாக நனைக்கும் என்னை... ஈரமான உடைகளோடு ஏகாந்தமான உன் நினைவுகளோடு நடை பயில ஆரம்பிக்கும் நொடியில், சற்றே வேகம் கொண்டு ஆர்ப்பரித்து நீர் துளிகள் ஊடுறுவும் என் அணுக்களின் அடுக்குகளில்... மழை குறைந்த வேளைகளில் பூ வானம் தூறலாய்.... வாய் திறந்து ஏந்துவேன் காதல் தாகம் தீர்ப்பதற்காய்... முற்றிலும் நின்று, வெயில் வந்து அதன் பின்னும் தொடர்கிறேன்.... கொஞ்சம் கொஞ்சமாய் உலர்கிறது உடைகள்.. இன்னும் மழை தாங்கிய நிலம் போல் ஈரமாகவே இருக்கிறது நாம் இணைந்து நடந்த மழை கால நினைவுகள்...

No comments: