பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

முதல் வெள்ளி

நடை பெற்றுக் கொண்டிருக்கும் பாரா- ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக களமிறங்கி உயரம் தாண்டுதலில்  முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த நாகராஜே கவுடா ( சாதிப் பெயர் இருக்குன்னு யாரும் வம்புக்கு வராதீங்கப்பா).

மற்ற எல்லா நாட்டவரும் விளையாட்டுக்குப் பயன்படும் காலணிகள் அணிந்து விளையாட, வெறும் கால்களால் ஓடி வந்து தாண்டுகிறார் ஒருவர்... இந்திய அரசாங்கத்தை நினைத்து பெருமைப் படாமல் இருக்க  முடியவில்லை... நம்மளுக்கு சானியா கூட யாரு டபுள்ஸ் விளையாடுவது என்பது தான் முக்கியமே தவிர, இவர்களுக்கான காலணிகள் இல்லை...

இரண்டு விஷயங்கள் தான்...

தகுதி உள்ளவனை இந்த அரசாங்கம் எப்பொழுதுமே உற்சாகப் படுத்தியதில்லை...

தகுதி உள்ளவன் எல்லா தடைகளையும் தாண்டி சாதிப்பான்....

No comments: