பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

சிறிது காலத்துக்கு முன்பே...

சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்
இன்னும் நிறைய பேசி இருக்கலாம் 


இன்னும் நிறைய சண்டை போட்டிருக்கலாம் 


என்னக்கான வேறொரு பாதையை
நீ அடையாளம் காட்டியிருக்கலாம் 


இப்போதைய நான் இல்லாமல்
ஒரு பருந்தாக வெளியெங்கும் அலைந்திருக்கலாம் தான் 


சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்...

அப்பொழுது உன்னை சந்தித்திருந்தாலும்
இதையே தான் சொல்லி இருப்பேன்
சிறிது காலத்துக்கு முன்பே உன்னை சந்தித்திருக்கலாம்...

No comments: