பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

முக நூல் 03.09.2012

சற்று முன்
என் சொற்களுக்குள்
உன் மௌனத்தைப் புதைத்தேன்
இனி அது
கவிதையாகிவிடும்...


..........................................................................................................

சற்று முன்
ஒரு கவிதையை வரைகிறாய்
அதில் என்னையும் ஒரு சொல்லில்
இருத்துகிறாய்
இனி அக் கவிதையில்
உன்னுடன் நானும் இருக்கிறேன்
என்பதை நம்புகிறேன்
நீயே சொல்
வார்த்தைகளில் மட்டுமில்லை
என்பதை...


............................................................................................................

எனக்கான கனவுகளை
நீ காணத் துடிப்பதன்
நியாயங்கள் புரியவில்லை
எனது வலியும்
எனது புன்னகையும்
அதன் கனவுகளில்
என்னை தொலைத்திருக்கும் போது
சாத்தியமாகலாம்
உன் கனவுகளும்...


.............................................................................................................

கனவுகளில்
வழி தவறும் குழந்தை நான்
கை பிடித்து அழைத்து வருகிறாய்
ஒவ்வொரு முறையும்
இவ்வுலகிற்கு
உன் யதார்த்தங்கள் புரியும் தான்
என் கனவுகளும் தெரியும் தானே
ஊர்க் குருவியோ
பருந்தோ
அதன் வானம் வெளியில் இல்லை
சிறகுகளில் மட்டுமே...


................................................................................................................


யாருக்கும் தெரியா கதையை
சொல்லத் தொடங்கினேன்
தயக்கமே இல்லை
அது சரி
உன்னிடம் சொல்லாமல்
யாரிடம் சொல்வது...


...................................................................................................................

எங்கிருந்து வந்தாய் நீ
என் பால்யத்தோடு கைகோர்க்க
கனவுகளோடு விளையாட
கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல
யாரோவாக இருந்த நீ
எப்படி நுழைகிறாய்
என் சொற்களுக்குள்
என் கனவுகளுக்குள்
என் வாழ்க்கைக்குள்... 


     

No comments: