பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

Sep 4, 2012

பிரிந்து போ...


எதுவுமில்லை
எனும்
எதோ ஒன்று இருக்கிறது
நம்மிருவருக்கும்...


எனக்கு வேறெதுவும்
தெரியாது
உன் மெளனத்தை
மெளனமாக
எதிர்கொள்வதைத் தவிர...


இதுவரை...
இனிமேல்...
வேறுபடலாம்
உன் மெளனத்தின்
அருஞ்சொற் பொருள்...


உயிரைச் சிதைக்கிறது... 
ஒரு பொருளற்ற மௌனமும்
புரிதலற்ற சொல்லும்... 

உன்னிடம்
நான் கேட்பதெல்லாம்
சண்டையிட்டுப் பிரிந்து போ
என்பது தான்...


 

  

No comments: