பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

சொர்க்கத்தின் கதவுகள்


திறப்பதற்கான சாத்தியங்கள் ஏதுமற்று..
வானில் இறுக்கமாக
மிக மிக இறுக்கமாக
மூடப்பட்டு விட்டன
சொர்க்கத்தின் கதவுகள்
ஏகாதசியோ,சிவன் ராத்திரியோ
கிழமைகளுக்குத் தெரிவதில்லை
நாம் அவைகளுக்கு வைத்த பெயர்கள்
எப்போதும் போலே விடிகின்றன
எப்போதும் போலே மடிகின்றன
இதற்கிடையே தான் நமக்குள்ளான
பலப்பரீட்சைகள்..

No comments: