பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

போலிக் கிரீடங்கள்...

எத்தனை இரவுகள் உனக்கான காத்திருப்பில் கழிந்தது என் அன்பே..
எத்தனை பருவங்களின் சுழற்சி
மாறி மாறி வந்து போயிற்று தெரியுமா?
உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
இதோ இந்த நதியின் நீர் வற்றிப் போயிற்று
இதிலிருந்த கடைசி மீனையும்
கொக்கு கொத்திப் போயிற்று
ஒரு விடியலில்
காணாமல் போன சூரியனால்
இருட்டு கவ்விக்கொண்டது
இதய அறையெங்கும்
அழைக்கும் குரல் கேட்காவண்ணம்
உன் செவிகள் திறனிழந்து விட்டன
எதையும் நோக்கவியலா
அந்தகம் உன்னை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது
உன் கிரீடங்களை இறக்கவோ,கழற்றவோ
நீ ஒரு போதும் தயாரானதில்லை
கர்ணனின் கவசகுண்டலம் போல
ஒருவகைக் கம்பீரத்தை
கவனமாய் சுமக்கிறாய்
ஆனால் என் அன்பே...
அதன் கனம் என்னால் தாளவியலாததாக இருக்கிறது....

No comments: