பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

காதல் களத்தில்

ஒரு விளையாட்டின் இறுதிக் கட்டப் பரபரப்பில் இருக்கிறாய்
களம் முழுதும் சுழன்றடித்து
சூழ்நிலையை உனதாக்கிக் கொள்கிறாய்
உன் மீதான குற்றச்சாட்டுகளில்
என் ஆர்வமின்மை உன்னை அச்சம் கொள்ள செய்கிறது
எனக்கு எப்படியேனும் விளக்கிவிட வேண்டுமாய்த் தவிக்கிறாய்
ஒரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறாய்
அல்லது சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனிக்கிறாய்
நேற்று வரை சுய விலக்கம் கொண்டிருந்த நீ - இன்று என் தோள் சாய்ந்து விடத் துடிக்கிறாய்
என் தோள்களோ சுமந்த பாரத்தில்
காய்ப்புக் காய்த்துக் கிடக்கின்றன
எனினும்
எனை ஏற்றுக் கொள்ளேன் என்ற
உன் அழுத்திய விளி கேட்டு
என் கர்ப்ப பாத்திரம் திறந்து
உன்னை இட்டு மூடிக் கொள்கிறேன்.

No comments: