பிறப்பு கேட்காமலே கிடைத்த சாபம்...

மரணம் கேட்டும் கிடைக்காத வரம்...

May 8, 2012

அதிஜீவனம்

சிறியதென்றாலும்
அதுவும் தயாராகிக் கொண்டுதான் இருக்கிறது
ஆனால் சுற்றிலும் அடைத்துக்கொணடபடி
பூக்களையிட்டுக் காட்டியபடி
பிரார்த்தித்த படி

என்றாலும்
இக் குன்றுப் புல்லிற்கு
வேனலினூடே
அதிகம் ஜீவிக்க இயலுமோ?

கொன்றை மரமே கொன்றை மரமே
வெயிலை உருக்கி
ஸ்வர்ணமாக்கி
காதில் அணியும் கலையை
அதற்குச் சொல்லிக் கொடுக்கிறாயா?

ஊஞ்சல் மரமே ஊஞ்சல் மரமே
வேனலை எடுத்து
குளிர்த் தொப்பியாக்கி
தலையில் வைத்துக் கொண்டு விளையாடி
அதை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறாயா?

இல்லையெனில்
சிறிதன்றோ என்றெண்ணி
வேனலதை
பசுமைக்குத் திறந்து வீசிவிடும்..
‎(மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த கவிதை)
வேனில் காலத்தைப் பற்றியது..
 

No comments: